தமிழ் சினிமாவில் காதல் படத்தில் சந்தியாவிற்கு தோழியாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் சரண்யா நாக் இவர் தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஆண்ட்டி போல் மிகவும் குண்டாக மாறியுள்ளார்.
நடிகை சரண்யா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர் நீ வருவாய் என திரைப்படத்தில் பார்த்திபன், தேவயானி, அஜித் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலாக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், பாலாஜி சக்திவேல் இடம் அறிமுகமானார் அதனால் காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காதல் திரைப்படத்தில் சரண்யா நடித்த முதல் திரைப்படம் கதாநாயகியாக இல்லை என்றாலும் கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரம் ஆக அமைந்தது.
அதன் பிறகு ஜெயம் ரவி நடித்து வெளியாகிய பேராண்மை திரைப்படத்தில் அஜிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பேராண்மை திரைப்படத்திற்கு பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. ஆனால் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் வெளி உலக தொடர்பு இல்லாமல் நான்கு வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது ஹார்மோன் பிரச்சனை காரணமாக குண்டாக மாறிவிட்டதால் தன்னுடைய உடல் எடையை குறைக்க அதிகமாக முயற்சி செய்து வருகிறார் அதனால் உடற்பயிற்சி கடைபிடித்து வருகிறாராம் நடிகை சரண்யா நாக். இந்த நிலையில் இவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.