20 ஓவர் உலக கோப்பை : இறுதி போட்டியில் இந்த இரு அணிகள் மோதினால் மக்கள் ரொம்ப சதோஷப்படுவார்கள் – சக்லேன் முஸ்டாக் கருத்து.

இந்திய அணி தற்போது 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்ற அதிக முனைப்பு காட்டி வருகிறது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவினாலும் அடுத்தடுத்த போட்டியில் வெற்றியை கண்டு இந்திய அணி மீண்டும் இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை
வெல்லும் என்பது கிரிக்கெட் ஆர்வம் கருத்தாக இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளருமான சக்லேன் முஸ்டாக் கூறியுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்த இரு அணிகள் களம் இறங்கினால் அது மக்களுக்கும் நல்ல போட்டியாக இருக்குமென கூறியுள்ளார்.

அப்படி அமனைதால் தான் உலக கோப்பை இறுதி  நல்லதொரு போட்டியாக அமையும் என கூறியுள்ளார் அந்த அணிகள் வேறு எதுவும் அல்ல இந்தியா பாகிஸ்தான் அணிகள் தான். இரு அணிகளும் கிரிக்கெட் விளையாடும் போது அதிக மக்கள் கூட்டம் இருக்கும் மேலும் தொலைகாட்சியில் பார்போரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என தெரிய வருகிறது.

இரு அணிகள் போட்டி எப்போதும் பலம் வாய்ந்த ஒரு போட்டியாக தான் இதுவரை அமைந்துள்ளன அதனால் இறுதிப்போட்டி இரண்டு அணிகள் மோதினால் சிறப்பாக இருக்கும் என கூறினார். முதல் போட்டியில் இந்திய பாகிஸ்தான் போட்டி முடிந்தன.

அதன்பிறகு இந்திய வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் கட்டித்தழுவிய காட்சிகள் மக்களை கவர்ந்தது மேலும் இருவருக்கும் உள்ள புரிதல் நன்றாகவே இருந்தது என கூறினார் இதனால் மக்கள் அனைவரும் சமம் என்பது நன்றாகவே தெரிந்தது அதேபோல் இறுதிப்போட்டியில் விளையாண்டால் மக்கள் இன்னும் நல்லதொரு மேம்பாட்டை அடைவார்கள் என்றும் கூறினார்.

ind vas pak
ind vas pak

Leave a Comment