சாதி பெயரை வைத்து கூப்பிடாதவர்கள்.. தனுஷ் பட நடிகை முடிவு.! குவியும் பாராட்டுக்கள்

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை சம்யுக்தா மேனன். இவர் தமிழில் தனுஷின் வாத்தி திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்று தரும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இசை வெளியீட்டு விழாவில் சம்யுக்தா மேனன் பேசியது..

எல்லாருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது அது குறித்து நாம் விலாவாரியாக பார்ப்போம்.. இசை வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்யுக்தா மேனன் செய்தியாளர்களிடம் பேசியது.. எனது பெயர் சம்யுதா தான் ஆனால் மேனன் என்ற ஜாதி அடையாள பெயர் போட்டு கொள்வதை நான் விரும்பவில்லை..

மலையாள சினிமாவில் பல சம்யுக்தாக்கள் இருப்பதால் மீடியாக்கள் என்னை தனியாக காட்ட “மேனன்” என்று இணைத்துக் கொண்டனர் இனிமேல் என்னை தயவு செய்து மேனன் என்று சாதியை அடையாளப்படுத்தாமல் சம்யுதா என்று கூறினால் போதும் என்று அவர் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இது போன்ற முடிவுகள் ஒரு நடிகை எடுப்பதால் உங்களை பின்தொடர்ந்து வருவர்களும் மாற அதிக வாய்ப்புகள் இருக்கு என பலரும்  கமெண்ட் அடித்தும் வருகின்றனர். மேலும் பேசிய அவர்.. வாத்தி படம் கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும் என்றும், எல்லோரும் படிக்க வேண்டும் ஆனால் இதைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.

மேலும் பேசி அவர் நான் பாலக்காட்டு பெண்ணாக இருந்தாலும் எனக்கு தமிழ் சரளமாக வரும் என்றும், தமிழ் திரைப்படங்களில் நடிக்க எனக்கு இதுவரை சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் தனுஷ் உடன் நடித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என தெரிவித்தார்.

samyuktha menon
samyuktha menon

Leave a Comment