பொதுவாக நாம் பழங்களும் காய்கறிகளும் உணவில் எடுத்துக்கொள்வதால் நமது உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கிறது இது நாம் அனைவரும் அறிந்தது தான், அதுமட்டுமில்லாமல் இதை குறிப்பாக குழந்தைகள் பழங்கள் காய்கறிகளும் எடுத்துக் கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கின்றன.
ஆனால் இதில் சில பழங்களை சாப்பிடும் போதும் அல்லது சில பழங்களுடன் மற்ற பழங்களை இணைத்து கொடுக்கும் போதும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும், அப்படி சேர்த்து கொடுக்கக் கூடாத சில பழ வகைகளை நாம் பார்ப்போம்.
ஆரஞ்சு மற்றும் கேரட்
பொதுவாக ஆரஞ்சு மற்றும் கேரட்டை தனித்தனியாக உட்கொள்வதால் நன்மைகள் உண்டு ஆனால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் சில ஆபத்துகள் ஏற்படும் அதாவது நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உண்டாகலாம்.
பப்பாளி மற்றும் எலுமிச்சை
பப்பாளி மற்றும் எலுமிச்சையை ஒன்றாக சாப்பிட கூடாது ஏனென்றால் இது மோசமான காம்பினேஷன், இது மனிதர்களுக்கு ரத்த சோகையை உண்டாக்கும் அதுமட்டுமில்லாமல் ஹீமோகுளோபினை சமச்சீராக்கும், இதை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்தானது.
ஆரஞ்சு மற்றும் பால்
ஆரஞ்சு மற்றும் பால் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடவே கூடாது அப்படி சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும், அதுமட்டுமில்லாமல் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன பால் சேர்ந்த உணவுப் பொருட்களுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடுவதால் அதில் உள்ள அமிலம் செரிமானத்திற்கு பொறுப்பாக இருக்கும் ஸ்டார்ச் முற்றிலும் அழித்து விடுகிறது அதனால் அஜித்திற்கு வழிவகுத்துக் கொள்கிறீர்கள் இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
வாழை மற்றும் கொய்யாப்பழம்
வாழை மற்றும் கொய்யாப் பழம் இரண்டையும் ஒரே சமயத்தில் சாப்பிட்டால் குமட்டல் வாயு தொல்லை அமில நோய் தலைவலி என அனைத்தும் வரும்.