ஒரு நடிகராக என்னை மக்கள் பார்ப்பதில்லை – என்னிடம் அவர்கள் எப்படிப் பழகுகிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன் – சசிகுமார் பரபரப்பு பேட்டி.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து இயக்கியும் வெற்றிகண்டு வருபவர் சசிகுமார் இவர் நடிப்பில் அண்மையில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகின ஏன் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக கூட சசிகுமார் நடிப்பில் “ராஜவம்சம்” என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது இந்த திரைப்படம் குறித்து நக்கீரன் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார் சசிகுமார்.

அப்போது அவர் கூறுகையில் ராஜவம்சம் திரைப்படம் ஒரு கூட்டு குடும்பம் எப்படி வாழவேண்டும் என்பதை எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என கூறினார் மேலும் இந்த படத்தில் எந்த ஊரு சீரியஸான காட்சிகளில் கிடையாது. எந்த ஒரு திருப்பமும் கிடையாது அனைவரும் ரசிக்கும்படி மிக எதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் என்னுடன் சேர்த்து யோகிபாபு, சிங்கம்புலி, தம்பி ராமையா, மனோபாலா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர். படம் ஜாலியாக இருக்கும் படம் பார்த்துவிட்டு வெளியே போகும்போது செமையா என்ஜாய் பண்ணுகிறீர்கள் அப்படிப்பட்ட படம்தான் “ராஜவம்சம்”.

மேலும் பேசிய அவர் பல்வேறு படங்களில் நடிக்க பல்வேறு இடத்திற்கு போய் இருக்கிறேன் அப்போது என்னை எல்லோரும் அண்ணன், தம்பி என ஜாலியாக அழைத்து பழகுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நானும் அப்படித்தான் எல்லோரிடமும் சகஜமாக பழக கூடியவன். “ராஜவம்சம்” திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்கிறேன் இருப்பினும் மக்கள் என்னிடம் கேட்பது.

நீங்கள் ஒரு சிறந்த இயக்குனர் நீங்கள் படத்தை இயக்கினால் நிச்சயம் நல்லதொரு வெற்றி பெறும் ஆனால் அவர்கள் சொல்வது உண்மைதான் ஆனால் தற்போது நான் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதால் படங்களை இயக்காமல் இருக்கிறேன் ஆனால் அடுத்த ஆண்டு நிச்சயம் ஒரு சூப்பர் படத்தை இயக்குவேன் என அவர் கூறியுள்ளார்

Leave a Comment