என்னை நடிக்க விடாமல் துன்புறுத்தினார்.! வடிவேலுவின் உண்மை முகத்திரையைக் கிழித்து எறிந்த நடிகர் பெஞ்சமின்..

காமெடி நடிகர் பென்ச்மினை அனைவருக்கும் தெரியும். இவர் இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியாகிய வெற்றிக்கொடி கட்டு என்ற திரைப்படத்தின் மூலம் நடித்த ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார், திரைப்படத்தில் பார்த்திபன், முரளி, வடிவேலு எனப் பலரும் நடித்திருந்தார்கள், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது அதுமட்டும் இல்லாமல் திருப்பாச்சி திரைப்படத்திலும் நடித்திருப்பார்.

காமெடி நடிகர் பெஞ்சமின் சமீபத்தில் சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வந்துள்ளார், அந்தப் பேட்டியில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார், அப்பொழுது வடிவேலுவின் முகத்திரையை கிழித்து தொங்க விட்டுள்ளார். அவர் கூறியதாவது கே பாலச்சந்திரன் அடிப்படையில் நடித்துக்கண்டிருந்த என்னை ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது இயக்குனர் சேரன் பார்த்துவிட்டு வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் நடிக்க வரச் சொல்லியிருந்தார்.

அதேபோல் இயக்குனர் சேரன் சார் சொன்ன மாதிரியே நானும் அங்கு வெற்றிக்கொடிகட்டு படப்பிடிப்புக்கு சென்றேன், என்னை 18 நாட்களாக ஒரு புளியமரத்தடியில் நாற்காலியை போட்டு உட்கார சொல்லி விட்டார்கள் எந்த காட்சியிலும் நடிக்க அழைக்கவில்லை, உடனே நான் இயக்குனர் சேரனிடம் ஏன் சார் என்னை உட்கார சொல்லி விட்டீர்கள் என கேட்டேன்.

அப்பொழுது வடிவேலு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் உங்களுடைய காட்சியும் அவருடைய காட்சியும் ஒரே நாளில் எடுக்கப்படவேண்டும் அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வடிவேல் நாளைக்கு வந்துவிடுவார் என கூறினார், வடிவேலு வராததால் 18 நாட்கள் பென்ச்மினை ஒரு புளியமரத்தடியில் உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் சேரன.

ஒருவழியாக வடிவேலு வந்தவுடன் எங்களுக்கு இடையேயான காட்சிகள் எடுக்கப்பட்டது எனக் கூறியுள்ளார், அந்த படத்தில் நடிக்கும் பொழுது என்னை நடிக்க விடாமல் வடிவேலு தன்னுடைய முகபாவனைகள் கிண்டல் செய்தார், அதனால்தான் வடிவேலுவை பார்த்து திட்ட வேண்டிய காட்சியை கிட்டத்தட்ட 5 ரீல் பெட்டிகளுக்கு மேல் வீணாகிவிட்டது. அப்பொழுது விண் ஆக்கப்பட்ட அந்த காட்சியின் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய்.

அதன் பிறகுதான் நடிகர் பார்த்திபனின் உதவியுடன் வடிவேலுவை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு வடிவேலுவை திட்டுவது போல் காட்சி படமாக்கப்பட்டது, தான் ஒரு புதுமுக நடிகர் என்றும் பார்க்காமல் என்னைத் திட்டி விடுவாயா திட்டிவிட்டு ஊருக்குப் போய் விடுவாய என்ற தோரணையில் மிரட்டி என்னை பயமுறுத்தி பல டேக் வாங்க வைத்து 60 ஆயிரம் ரூபாய் வீணடித்து விட்டார் அந்த ஒரு காட்சிக்காக வடிவேலு.

அனைவரும் ரசித்து பார்த்த அந்த காட்சிக்கு பின்னாடி இவ்வளவு சம்பவம் நடந்துள்ளதா என பெஞ்சமின் பேட்டிக்கு பிறகே அனைவருக்கும் தெரிகிறது, அதனால் பெஞ்சமின்க்கு பலரும் பரிதாபப்பட்டு வருகிறார்கள். அதேபோல் சமீபகாலமாக வடிவேலு மீது பல புகார்கள் எழுந்துள்ளது அந்த வகையில் இவரின் புகாரும் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Leave a Comment