தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர் அபுதாபியில் உள்ள மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். சாப்ட்வேர் துறையில் வேலை பார்த்த இவர் 2010 ஆம் ஆண்டு மிஸ் கர்நாடகா, மிஸ் நேவி குயின் ஆகிய பட்டங்களைப் பெற்றார். இவர் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன்பிறகு உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் என்னதான் தமிழில் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்கவில்லை.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் மலையாளத்தில் கம் தகம் புத்தகம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் நடிகை பார்வதி நாயரும் ஒருவர் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் கட்டி இழுப்பார். பொதுவாக சினிமாவில் வாய்ப்புகிடைக்க வேண்டும் என்பதற்காக பலரும் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள் அந்த வகையில் மொட்டை மாடியில் இருந்து கொண்டு ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் நடத்தியது மிகவும் வைரல் ஆனது.
அவரைத் தொடர்ந்து பல நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி பிரபலமாகி வருகிறார்கள் அந்த வகையில் தற்போது மொட்டை மாடியில் சிவப்பு நிற புடவையில் இடுப்பு தெரிய புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் பார்வதி நாயர் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.