நடிகை பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனால் இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பு மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது சினிமா வாழ்க்கையை மலையாள திரைப்படத்தின் மூலம் தான் தொடங்கினார்.
தமிழில் முதன் முதலாக அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து உத்தம வில்லன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் பார்வதி நாயர் தமிழில் மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை அதன் பிறகு நிமிர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
தற்பொழுது இவர் ஆலம்பனா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் எப்படியாவது முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டுமென பார்வதி நாயர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பறக்க விடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் இவரின் போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பார்த்தால் கவர்ச்சியின் எல்லை மீறுகிறார் என தோன்றும். இந்தநிலையில் நைட் ஆடையில் ஒரு பக்கம் இறக்கிவிட்டு ஜிகு ஜிகுன்னு போஸ் கொடுத்துள்ளார் பார்வதி நாயர்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.