பார்த்திபனின் “இரவின் நிழல்” திரைப்படம் – இரண்டு நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

சினிமா உலகில் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்த பிறகு நடிகர்கள் படங்களில் நடிப்பதை மட்டுமே ஒரு வேலையாக வைத்துள்ளனர் ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் தனது அந்தஸ்தையும் பார்க்காமல் தனது திறமையை சினிமா உலகில் வெளிப்படுத்த அயராது பாடுபடுவார்கள் அந்த வகையில்  பார்த்திபன் ஹீரோ என்ற இமேஜையும் தாண்டி இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

முதலில் புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடித்து இயக்கினார் முதல் படமே வெற்றி படமாக அமைய பின் அடுத்தடுத்த படங்களை இயக்க ஆரம்பித்தார். பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, புள்ள குட்டிக்காரன், ஹவுஸ்புல், குடைக்குள் மழை, கோடிட்ட இடங்களை நிரப்புக என பல படங்களை இயக்கினார்.

இப்பொழுதும் பல படங்களில் இயக்கியும் நடித்தும் ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் பார்த்திபன் பொன்னியின் செல்வன் மற்றும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் மேலும் இவரே இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் அண்மையில் திரையரங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரகிடா சஹா, ஆனந்த் கிருஷ்ணன், சாய்புரியங்கா ரூட் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து அசதி உள்ளது. மக்கள் மற்றும் ரசிகர்கள் இரவின் நிழல் படத்தை பார்த்துவிட்டு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருவதால் இந்த படத்திற்கான வசூல் தற்பொழுது அதிகரித்துள்ளது.

முதல் நாளில் மட்டும் இரவின் நிழல் திரைப்படம் சுமார் 90 லட்சம் வசூல் செய்துள்ள நிலையில் இரண்டு நாள் முடிவில் இதுவரை சுமார் தமிழகத்தில் மட்டுமே இரண்டு கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது இதனால் இயக்குனர் பார்த்திபன் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.

Leave a Comment