செய்திவாசிப்பாளருக்கு பலான புகைப்படத்தை அனுப்பிய மர்மநபர்கள். சரியான செருப்படி பதில் கொடுத்த பனிமலர்.

சமீப காலமாக சமூக வலைதளத்தை மிகவும் மோசமாக பயன்படுத்துகிறார்கள் மர்மநபர்கள், அதேபோல் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ளும் பொழுது மிகவும் கெட்ட வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

அதிலும் சமூக வலைத்தளத்தில் இருக்கும் பிரபல நடிகைகளுக்கு சில மர்ம நபர்கள் செய்யும் மோசமான செயல் முகம் சுளிக்க வைக்கிறது. அதுவும் நடிகைகளுக்கு மோசமான புகைப்படத்தை வெளியிடுவதை மர்மநபர்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

panimalar

இந்த நிலையில் பெண் பத்திரிக்கையாளர் பனிமலர் என்பவருக்கு சில ஆண்கள் மோசமான புகைப்படங்களை அனுப்பி அவரை டார்ச்சர் செய்துள்ளார்கள் இதற்கு டுவிட்டரில் செருப்படி பதிலை வெளியிட்டுள்ளார்.

panimalar

அதில் அவர் கூறியதாவது “ஆண்கள் நிர்வாணப் படம் அனுப்புவதன் உளவியலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதைப் பார்த்து மயங்கி உங்களிடம் பெண்கள் பேசுவார்கள் என நம்புகிறீர்கள் எனில் சாரி பிரதர்ஸ், எங்களுக்கு அருவருப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை.

panimalar

இயல்பிலேயே ஆண்களின் உடல் பார்த்து மயக்கம் ஏற்படும்படி பெண்கள் உருவாக்கப்படவில்லை என படித்திருக்கிறேன்(விதிவிலக்குகள் இருக்கலாம்). உங்கள் உறுப்பு ஆண்மை இல்லை என்ற தெளிவு எங்களிடம் இருக்கிறது, அதைத்தாண்டி தன்னுடைய செயல்களால் பேராண்மை மிக்க ஆண்கள் பலரை தினமும்.
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், அதில் எல்லோரிடமுமே நாங்கள் காதல் கொள்வதோ, கலவி கொள்வதோ இல்லை, அப்படி இருக்க நீங்கள் லிஸ்டிலேயே இல்லை. ஒழுக்கமும், நற்செயல்களுமே ஒருவரை ஈர்க்கும், அநாகரிகம் ஈர்க்காது. என கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version