மீனாவின் மூக்கை உடைத்த ராஜி!! அசிங்கப்பட்டு வெளியே நிற்கும் மீனா.. நடுராத்திரின்னு கூட பாக்காம பிரியாமணிக்கே டப் கொடுக்கும் மீனா

பாண்டியன் ஸ்டோர் 2 இன்றைய எபிசோடில் மீனா செந்தில் சண்டை  தொடர்ந்து போய்க்கொண்டிருப்பதால் கடுப்பான மீனா  ரூமை  விட்டு வெளியே வந்து கிச்சனுக்கு போய் தன்னீர் குடித்துவிட்டு பாத்திரத்தை போட்டு உருட்டுகிறார். என்னமோ தேடுறா என நினைத்தால் அதிரசம் எடுத்து சாப்பிட ஆரம்பிக்கிறார். பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு கோமதி அங்கு வருகிறார். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு மீனாவுடன் சேர்ந்து கோமதியும் அதிரசம் சாப்பிடுகிறார்.

அப்போது ராஜ்ஜியும் கதிரும் ரூமில் சண்டை போடுகிற சத்தம் கேட்டு வெளியே வருகின்றனர். ராஜி கதிரிடம் வெளிய என்ன பிரச்சனை எனக் கதிரிடம் கேட்கிறார்.  அதற்கு கதிர் நீயும் நானும் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என கூறுகிறார். நான் என்ன பண்ணினேன் என ராஜி கேட்க உன்ன நான் கல்யாணம் பண்ணுன ன்ல அதனால தான் சரவணண் அண்ணனோட கல்யாணம் தள்ளி போகுது. அதுமட்டுமில்லாமல் உன்னால தான் அண்ணண் அண் ணிக்குள்ள சண்டையும் வருது என கதிர் கூறுகிறார்.

உடனே ராஜி நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டனா உனக்கு எப்படி இந்த கல்யாணம் புடிக்கலையோ அது மாதிரி தான் எனக்கும் இந்த கல்யாணம் புடிக்கல என கூறுகிறார். அப்போது கோமதி வந்து கதவை தட்டுகிறார். உடனே ராஜி கதவை திறந்து ரூமுக்குல் கோமதியை வேகமாக இழுக்கிறார். அப்போது மீனாவும் ரூமுக்குள் போக முயற்சி செய்கிறார். ஆனால் ராஜியோ மீனாவின் மூஞ்சில் அடிப்பது போல் கதவை மூடுகிறார். இதனால் மீனாவுக்கு மூக்கில் அடிபட்டு விடுகிறது.

கோமதி உள்ளே போனதும் ராஜி உங்ககிட்ட நான் எனக்கு கதிர கல்யாணம் பண்ணிக்க வைக்க சொல்லி கேட்டனா, இல்ல இல்ல என கேட்கிறார். அதற்கு கோமதி ஆமா நீ அன்னைக்கு  செத்துடுவேன்னு சொன்ன அதான் வேற வழி இல்லாம நான் உன்ன கதிருக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் எனக் கூற, உடனே ராஜி உங்க பையன் இங்க என்ன தினம் தினம் குத்தி குத்தி காட்டிட்டு இருக்காரு நான் இங்க நல்லாவா இருக்கேன் நீங்க பாத்துட்டு தான இருக்கீங்க நான் செத்து செத்துப் பிழைக்கிறேன். அதுக்கு அன்னைக்கே ஒரேடியா செத்திருக்கலாம் என ராஜி கூறுகிறார்.

கோமதி அவர்கள் இருவரையும் சண்டை போட்டுக்காதீங்க என சமாதானப்படுத்தி விட்டு வெளியே வருகிறார். பிறகு கோமதி மீனாவும் பேசிக்கொள்கின்றனர். அப்போது கோமதி மீனாவிடம் இவங்க ரெண்டு பேரும் இப்படியே சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க இவங்க எப்ப தான் சமாதானம் ஆகி சேர்ந்து வாழ்வாங்க என மீனாவிடம் கேட்க அதற்கு மீனாவோ கொஞ்சம் டைம் எடுக்கும் என கூறுகிறார். எவ்வளவு டைம் எடுக்கும் என கோமதி கேட்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.