சரவணனிடம் தனியாக பேசணும் என சொல்லும் பெண்.! அதெல்லாம் வேலைக்கு ஆகாது என மறுக்கும் பாண்டியன்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடில்  சரவணனுக்கு  பெண் பார்ப்பது பற்றி பேசி கொள்கின்றனர்.  அப்போது மீனா மேட்ரிமோனியில் நாலஞ்சு பொண்ணுங்க ஓகே சொல்லிருக்காங்க அவங்க நம்பருக்கு போன் பண்ணி பொண்ணு பாக்க வரலாமான்னு கேட்கலாம் என சொல்கிறார்.

பாண்டியன் சரி என சொல்லி உடனே வீட்டில் இருக்கும் அனைவரையும் கதிர் ஒரே இடத்திற்கு வர சொல்லி கூப்பிடுகிறார். சரவணன் உட்பட அனைவரும் வந்ததும் ஒவ்வொரு பொண்ணுங்க வீட்டுக்கும் போன் பண்ணி பேசுகின்றனர். அப்படி பேசும் போது முதலில் ஒருவர் போனை எடுத்து மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார் என கேட்கிறார், அதற்கு ஆன்டிக் மரப்  பொருட்கள் கடையில் வேலை பார்க்கிறார் என சொன்னதும் வேணாம் என சொல்லி விடுகிறார்.உடனே கோமதி எல்லாம் தெரிஞ்சு தான அவங்க ஓகே சொல்லி இருக்காங்க ஆனா இப்ப வந்து வேணாம்னு சொல்றாங்க என கேட்கிறார். அதற்கு ஒரு சிலது அப்படித்தான் ஆகும் என செந்தில் சொல்கிறார்.

இதை கேட்டதும் சரவணன் நான் வேலைக்கு போறேன் பா நேரம் ஆகுது என சொல்கிறார். உடனே பாண்டியன் சரி நீ போ என சொல்கிறார். ஆனால் வீட்டில் இருக்கும் மற்றவர்கள்  சரவணன் இல்லாம எப்படி என கேட்க ஆமாம் இது மாதிரி ஏதாவது சொல்லுவாங்க அவன் மனசு கஷ்டப்படும் நம்ம பாத்துட்டு சொல்லலாம் என சொல்லி விடுகிறார்.  கடைசியாக ஒரு பொண்ணு மட்டும் ஓகே சொல்கிறது. அந்த பொண்ணு அழகாகவும் இருக்கிறது. ஆனால் அந்த பொண்ணே போன் அட்டென்ட் பண்ணி  பேசுவதால் பாண்டியன் என்ன அந்த பொண்ணு பேசுது வீட்ல இருக்க அப்பா அம்மா கிட்ட கொடுத்து பேசாத என கேட்கிறார். உடனே இந்த காலத்தில இதெல்லாம் சாதாரணம் என மீனா சொல்கிறார். கொஞ்ச நேரம் கழித்து அந்த பொண்ணே போன் பண்ணி  சரவணனிடம் தனியாக பேசணும் என சொல்கிறது.

அனைவரும் சம்மதிக்கின்றனர். ஆனால் பாண்டியன் மட்டும் சரிப்பட்டு வராது கல்யாணத்துக்கு முன்னாடி பேசுறது எல்லாம் சரிப்பட்டு வராது என மறுத்துவிட்டு  கடைக்கு சென்று விடுகிறார். அப்போது வீட்டில் இருக்கும் கோமதி இடம்  மீனா, கதிர், அரசி, ராஜி என நாலு பேரும் மாத்தி மாத்தி கோமதியை கன்வின்ஸ் பண்ணுகின்றனர்.

அதுபோல கடையில் இருக்கும்  பாண்டியனை பழனி செந்தில் மற்றும் தாத்தா என மூவரும் கல்யாணத்துக்கு முன்னாடி பேசறது எல்லாம் இப்ப சாதாரணம்ப்பா பேசினா தானே மனசுல என்ன இருக்குதுன்னு தெரியும் ஒருத்தவங்களுக்கு ஒருத்தவங்க ஒத்துப்போதான்னும் தெரியும் என சொல்லி பாண்டியனை ஒத்துக்கவைக்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.