யோவ் பாண்டியன் இதுக்கு பேரு சபதமா.. இதுல கோவம் வேற மீனாவும் ராஜியும் எப்படி சிரிக்கிறாங்க பாரு.! பின்னாடியே ஓடும் பாண்டியன் குடும்பம் .. பாண்டியன் ஸ்டோர்..

பாண்டியன் ஸ்டோர்2 இன்றைய எபிசோடில் மீனா விடிந்தது தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது செந்தில் எப்படி எழுப்புவது என்று தெரியாமல் பொருட்களை போட்டு உடைப்பது போல் நடிக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் போனில் ரிங்டோன் வைத்து மீனா காது பக்கத்தில் வைக்கிறார். அப்பவும் மீனா தூங்கிக் கொண்டே இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து துண்டால் அடித்து எழுப்பிவிட்டு ஒன்னும் தெரியாத போல் இருக்கிறார். நேரம் ஆகலையா வேலைக்கு போக வேணாமா கிளம்பலையா என மீனாவை பார்த்து செந்தில் கேட்கிறார். எனக்கு போக தெரியும் இத்தனை நாள் நீங்க தான் என்ன கெளப்பி விட்டீங்களா என மீனா கேட்டுவிட்டு வெளியே வந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறாள்.

அதே நேரத்தில் ராஜி கதிரின் அழுக்கு டிரெஸ்ஸை  எடுத்துக் கொண்டு துவைக்க போகிறார். ரூமில் இருக்கும் பெட்டையும் ஒழுங்கு படுத்துகிறார். அப்போது அங்கு வந்த கதிர்  என் டிரஸ் ஏன் எடுத்து வச்சிருக்க எனக் கேட்கிறார் அதற்கு ராஜி, நான் எக்ச்பிஷன்ல வைக்க போறேன் எனக் கூறுகிறாள். இந்த டிரஸ் எல்லாம் துவைத்து எத்தனை வாரம் ஆகுதுன்னு கூட தெரியல என ராஜி சொல்ல அதற்கு கதிர் அதெல்லாம் வருஷ கணக்குல ஆகுது என கூறுகிறார். உடனே ராஜி குமட்டுகிறாள் அதற்கு கதிர் ரொம்ப பண்ணாத இது ஏறும் எப்படி வேணா இருக்கும் என சொல்கிறார். ஆனால் நீ எதுவும் செய்யக்கூடாது என சொன்னதும் உடனே ராஜி கதிரை எழுந்திருக்க சொல்லி மடிச்சு வச்ச பெட்டை திரும்பவும் கலைச்சி போடுகிறார். அதற்கு கதிர் இவளுக்கு எவ்வளவு திமிரு என கூறுகிறார்.

அதைத் தொடர்ந்து ராஜி பக்கெட் எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார். அதை பார்த்த மீனா என்ன பண்ண போற ராஜி என கேட்க துணி துவைக்க போறேன் என கூறிவிட்டு சென்று விடுகிறார். உடனே மீனா ரூமுக்கு ரூம் வாசப்படி என சொல்லிக்கிட்டே டீ குடிக்கிறாள்.

அதனைத் தொடர்ந்து அடுத்த  சீனில் பாண்டியன் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் பேச வேண்டுமென சொல்கிறார். உடனே அனைவரும் ஹாளுக்கு வருகின்றனர். அப்போது பாண்டியன் நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன். இன்னைலேருந்து  எண்ணி 50 நாளுக்குள்ள நான் சரவணனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் அதுவரைக்கும் நான் செருப்பு போட மாட்டேன் என  கூறுகிறார்.

இந்த சபதத்தை கேட்ட அனைவரும் ஷாக் ஆகின்றனர். ஆனால் மீனா சிரிப்பு தாங்க முடியாமல் வாயை மூடிக்கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு கதிர் செருப்பு போடாம இருந்தா மட்டும் கல்யாணம் ஆயிடுமா என கேட்கிறார். அதோடு மட்டுமில்லாமல் இந்த மாசம் மார்ச் மாசம் அடுத்து ஏப்ரல், மே ரொம்ப வெயில் அதிகமா இருக்கும் இப்ப போய் செருப்பு போடாம எப்படி இருக்க முடியும் என கதிர் கேட்கிறார். அதற்கு பாண்டியன் அவனை வாயை மூட சொல்லு என கோமதியிடம் கூறிவிட்டு  வெளியே போகிறார். உடனே அனைவரும் அவர் பின்னாடியே ஓடுகின்றனர் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவு அடைகிறது.