சரவணனை பங்கமாய் கலாய்க்கும் மீனா, ராஜி!! அண்ணனுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என செந்தில் எடுக்கும் சபதம்… பாண்டியன் ஸ்டோர்..

பாண்டியன் ஸ்டோர் 2 இன்றைய எபிசோடில்  செந்தில் மேட்ரிமோனி பத்தி அவங்க அப்பா  பாண்டியனிடம் சொல்கிறார். ஆனால் பாண்டியன் ஒத்துக் கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து  வீட்டில் ராஜி படித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது மீனா ராஜியிடம் எனக்கு போர் அடிக்குது என்கூட பேசு நீ படிச்சிட்டு என்னவாக போற என கேட்கிறாள். அதற்கு ராஜி நான் போலீஸாக போறேன் என சொல்கிறாள். மேலும் மீனா இதுக்கு முன்னாடி இந்த வீட்ல இருக்கிறவங்க கூட யார் கிட்டயாவது பேசி இருக்கியா என கேட்கிறாள். அதற்கு ராஜி நான் பேசுனது இல்ல, உங்க வீட்ல இருக்கவங்க இந்த வீட்ல இருக்குறவங்கள பத்தி ரொம்ப கொடூரமா சொல்லி இருக்காங்களா என கேட்கிறார்.

ஆமாம் அதுக்கு அப்புறம் நீ இப்ப இங்க வந்துட்டு இல்ல இப்ப எப்படி தோணுது  என இருவரும் பேசிக் கொள்கின்றனர். அந்த நேரம் பார்த்து சரவணன் வீட்டுக்கு வருகிறார். உடனே ராஜ்ஜியம் மீனாவும் சேர்ந்தது சரவணணை கலாய்கின்றனர். சாமி எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க இவ போலீஸாயிடுவாளா என ராஜியை காமிச்சி மீனா கேட்கிறார். அதுபோல ராஜி மீனாவை காண்பித்து இவங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்குமா என சொல்லுங்கள் சாமி என கிண்டல் பண்ணுகின்றனர். உடனே சரவணன் அம்மா என கத்துகிறார். அம்மா இவங்க ரெண்டு பேரும் என்னை கிண்டல் பண்றாங்க என கம்ப்ளைன்ட் பண்ணுகிறார். அதற்கு கோமதி விடுங்கம்மா என சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து  செந்தில் மேட்ரிமோனி விஷயத்தைப் பற்றி  கோமதி இடம் சொல்கிறார். கோமதிக்கு மேட்ரிமோனி என்னன்னு தெரியல, உடனே  கதிர் போன காமிச்சு இதுல தான் நாங்க  பொண்ணு பாக்கறதுக்கு ரிஜிஸ்டர் பண்ணி இருக்கோம் என காட்டுகின்றனர். இத பத்தி நீ அப்பா கிட்ட பேசணும் என  செந்தில்சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து கோமதி நைட் டிபனுக்காக கிச்சனில் டிபன் ரெடி  பண்ணிக் கொண்டிருக்கின்றார்.  அப்போது மீனா வந்து மாமாவும் செந்திலும் கடை கணக்கு பார்த்துட்டு இருக்காங்க. நீங்க போய் மாமா கிட்ட இத பத்தி பேசுங்க என சொல்கிறார். உடனே கோமதியும்  பாண்டியனிடம் போய்  மேட்ரிமோனி பத்தி பேசுகிறார். அவருக்கும் புரியவில்லை, உடனே  மீனா கதிர் போனை வாங்கி அதில் இருக்கும் போட்டோ காமிக்கிறார். அதைப்பற்றி சொல்லி பாண்டியனிடம் புரிய வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து அடுத்த சீனில் மீனா பெட்டில் செந்தில் பக்கத்தில்  படுக்கப் போகிறார். உடனே செந்தில்  அமைதியா இரு என்ன தொடாத நான் சாமிக்கு வேண்டி இருக்கேன் என சொல்கிறார். அதற்கு மீனா என்ன இந்த வீட்ல எல்லாரும் இதையே சொல்றீங்க. அடுத்து கதிர் அரசி இவங்களும் கூட ஏதாவது பண்ண போறாங்களா என கேட்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.