மருத்துவமனையில் இருந்தும் அடங்காத ஐசு கண்ணன்.! செம்ம கடுப்பில் முல்லை.!

பாண்டியன் ஸ்டோர் இன்றைய  எபிசோடில் ஐசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது மருந்து வாங்க காசு இல்லாமல் கண்ணன் நின்று கொண்டிருக்கிறார்.. மெடிக்கலில் அப்புறம் காசு தரேன் என சொல்லி மருந்தினை வாங்கிக்கொண்டு நர்ஸிடம் கொடுக்கிறார்.

பின்னர் ஐசுவின் சித்தி இங்கு இருந்தால் கண்ணன் நம்மிடம் காசு கேட்பான் என முடிவு பண்ணி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதைத் தொடர்ந்து கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்துடன்  கதிருக்கு போன் செய்து  ஐசு கீழே விழுந்துட்டால் ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கேன் என கூறுகிறார்.

உடனே கதிர் ஹாஸ்பிடலுக்கு வருகிறார் வரும்போது தனத்துக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு வருகிறார் கதிர் வந்த சிறிது நேரத்திலேயே தனம் மற்றும் முல்லையும் அந்த மருத்துவமனைக்கு வருகின்றனர்.

உடனே வார்டில் இருக்கும் ஐசு வை பார்த்து இப்போது உடம்பு நல்லா இருக்கா என விசாரிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து  முல்லை ஐசு விடம்  எப்படி உனக்கு இப்படி ஆனது  என விசாரிக்கிறார். உடனே அதற்கு ஐசு நாங்கள் வீடியோ போட்டுட்டு இருக்கோம்ல அத நீங்க பாத்துட்டு இருக்கீங்களா அப்படின்னு கேக்குறாங்க அதான் நீங்க விளக்கமாறு வாங்குறது  வெங்காயம் வாங்குறது  உங்க வீட்ல எத்தனை ரூம் இருக்கு என ஒன்னு விடாம போடுறீங்களே அதான் ஊருக்கே தெரியுமே என கடுப்பாக கூறுகிறார்.

ஆமா இப்ப கடைசியா போட்ட வீடியோவை பாருங்க அதுல நான் டான்ஸ் ஆடிட்டு இருக்கும் போது கீழே விழுந்துட்டேன் என கூறியதும் முல்லை, தனம், கதிர் என அனைவருக்கும் கோபம் வந்துவிட்டது.  இந்த நிலையில் யாராவது டான்ஸ் ஆடுவாங்களா என  கேட்கின்றனர். இது மாதிரி நடக்கிறது சகஜம் தான் என ஐசு கூறுகிறார்.

உடனே என்ன சொல்வது என தெரியாமல் அங்கிருந்து வெளியே வந்து வெயிட் பண்ணுகின்றனர். பிறகு கொஞ்ச நேரம் ஆனதும் முல்லை நான் போய் ஐஸ்க்கு மருந்து கொடுத்துவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு  வார்டுக்கு செல்கிறார்.

அங்க போய் பார்க்கும் போது ஐசுவும் கண்ணனும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆயிருப்பதை வீடியோவாக போட்டால் சிம்பதியில் நிறைய வியூஸ் வரும் என்பதற்காக வீடியோ எடுக்கின்றனர். இதனைப் பார்த்த முல்லை கடுப்பாகி வெளியே வந்து தனம் மற்றும் கதிரை கூப்பிட்டு இங்கு வந்து என்ன நடக்குது என  பாருங்கள் என கூறுகிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment