பாண்டியன் ஸ்டோர் முல்லை சித்ரா தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் ரசிகர்கள்.

pandiyan stores serial actress mullai passed away:சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரா 1992 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி சென்னையில் பிறந்தவர். அதன்பிறகு தனது கல்லூரிப் படிப்பை சென்னையிலேயே முடித்தார்,  இவர் முதன்முதலாக மக்கள் தொலைக்காட்சியில் 2013 ஆம் ஆண்டு சட்டம் சொல்வது என்ன என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு நொடிக்கு நொடி ஊர் சுத்தலாம் வாங்க என ஏகப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

சித்ராவிற்கு தற்பொழுது வயது 28 தான். மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் அதன் பிறகு வேந்தர் டிவி, ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார்..

இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா, மன்னன் மகள், சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்,  இவர் சென்னையை சேர்ந்த ஹேமந்த் என்பவரை விரைவில் திருமணம் செய்ய இருந்தார்.

பாண்டியர் ஸ்டோரில் கதிர்-க்கு ஜோடியாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்துள்ளது.

இவருக்கு சமீபத்தில் தான் ஹேமந்த்  என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது இருவரும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள் இவர் தற்கொலை செய்து கொள்ளும் பொழுது அவருடன் ஹோட்டல் அறையில் ஹேமந்த் இருந்தார் என கூறப்படுகிறது.

ஒரு ஹோட்டலில் அதிகாலை இரண்டரை மணிக்கு தனது வருங்கால கணவருடன் வந்து தங்கியிருக்கிறார். அதன் பிறகு குளிக்க போகிறேன் நீங்கள் வெளியே இருங்கள் என சொல்லிவிட்டு நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை, நீண்ட நேரம் கதவை திறக்காமல் இருந்த சித்ரா என்ன செய்கிறார் என்று தெரியாமல் வருங்கால கணவர் முழித்துள்ளார். அதன் பிறகு குளியல் அறையை திறக்க முடியாமல் ஹோட்டல் ஊழியர்களை அழைத்து இன்னொரு சாவி மூலம் கதவை திறந்ததும் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

சித்ரா தற்கொலை குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்த தகவல் வெளியாகியுள்ளது,  இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் செய்ய இருக்கும் நிலையில் ஹோட்டல் அறையில் தன்னுடைய வருங்கால கணவருடன் தங்கிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது எதற்காக என்ற காரணம் மட்டும் இன்னும் தெரியவில்லை இது கொலையா அல்லது தற்கொலையா என்ற நோக்கத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment