உங்களால் தான் எனக்கு இந்த பிரச்சனையே வருது என சித்ரா கூறிய அந்த ஒரு வார்த்தை.! கதறிக் கதறி அழுது வீடியோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் கதிர்.! வைரலாகும் வீடியோ..

kathir speak about chitra video viral:சீரியல், தொகுப்பாளினி, மேடை நிகழ்ச்சி என பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த சித்ரா இன்று இல்லை என்கின்ற உண்மை ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஏற்க மறுக்கிறார்கள். அதற்கு காரணம் ஒவ்வொருவரின் மனதிலும் சித்திரா அந்த அளவு ஆழமாக இடம்பிடித்துவிட்டார்.

ரசிகர்களால் சித்ராவின் இழப்பை ஈடுகட்ட முடியாமல் தவித்து வரும் இந்த நேரத்தில் சித்ரா உடன் கூடவே இணைந்து நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் என் நிலைமையை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

இந்த நிலையில் சித்ரா உடன் ஜோடி நம்பர்-1, பாண்டியன் ஸ்டோர் ஆகிய சீரியல்களில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் குமரன்,  இவர் அந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்த நிலையில் குமரன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பார்ப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கதிர் கூறியதாவது அனைவருக்கும் வணக்கம் இப்போ சித்தர எப்படிப் போனார்கள் என்பதை பற்றி நான் பேச வரவில்லை அதைப் பற்றி பேசுவதால் அவங்க திரும்பி வந்து விடப் போவதுமில்லை ஆனால் அதைப்பற்றி எனக்கு பேச விருப்பமில்லை ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அவங்க யாராவது ஒரு நல்ல நண்பர்களிடம் தன்னைப்பற்றிய பர்சனல் விஷயங்கள ஷேர் செய்து இருக்கலாம்.

அப்படி செய்திருந்தால் ஒருவேளை அவரின் இழப்பை தடுத்து இருக்கலாமோ இந்த பிரச்சினையில் இருந்து அவர் வெளியே வந்திருக்கலாம் என நினைக்கிறேன். மேலும் அவர் தொடர்ந்து அழுதுகொண்டே பேசிய குமரன் சித்ரா ஒரே நாளில் நிறைய வேலைகள் செய்வாங்க அப்படியிருந்தும் சித்ரா நிறைய நேரத்தை பாண்டியன் ஸ்டோரில் தான் செலவிடுவார்.

அதேபோல் சித்ரா என்னிடம் பேசும்பொழுது நீங்க பாண்டியன் ஸ்டோருக்கு நாளைக்கு தேதி கொடுத்திருக்கிறீர்களா என கேட்க நான் அதிக நேரம் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு தான் தேதி கொடுப்பேன்.  நான் வெளியே போவது மிகவும் குறைவுதான் ஆனால் அவங்க அப்படி இல்லை நான் தேதி கொடுத்தேன் என்று சொன்னால் சித்ரா உங்களால் தான் பிரச்சனையே வருது நீங்க எப்பொழுது கேட்டாலும் கொடுத்து விடுகிறார்கள்.

chithuvj
chithuvj

ஏனென்றால் அன்றைய தினம் அவங்க வேற ஏதாவது சோ அல்லது ஈவன்ட் பண்ணனும்னு முடிவு செய்து வைத்திருப்பார்கள் வேற எதுவும் இல்லை என சித்ராவை நினைத்து நினைத்து அழுதுள்ளார் என்கின்ற குமரன்.  சித்ரா கொஞ்சம் ஓய்வு எடுத்து இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment