Pandian stores : படையப்பா பாடல் போல் ஒரே எபிசோடில் மொத்த கதையையும் முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.! நெட்டிசன்கள் அதிர்ச்சி…

Pandian stores today episode October 9 : பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய சீரியலில் பிரசாந்த் தன்னுடைய சித்தி வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது போலீஸ் அவரை தேடிக் கொண்டு சித்தி விட்டிருக்கே வருகிறார்கள். ஆனால் பிரசாந்தை பிடித்த போலீசை தள்ளி விட்டு விட்டு பிரசாந்த் தப்பி ஓடுகிறார். பிறகு மல்லி போலீஸிடம் எதற்காக பிரசாந்தை அரெஸ்ட் செய்ய பார்க்கிறீர்கள் என கேட்க ஜனார்த்தனனை கொலை செய்ய முயற்சி செய்தது மேனேஜரை போட்டு தள்ளியது அனைத்தும் உங்க மகன் பிரசாந்த் தான் என உண்மையை கூறுகிறார்கள்.

அடுத்த காட்சியில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் அனைவரும் உட்கார்ந்த அழுது கொண்டிருக்கிறார்கள் கதிர் சாப்பிட்டாரா இல்லையா என்று தெரியவில்லை பாப்பாவை வந்து பார்க்கவே இல்லை என முல்லை புலம்பி கொண்டிருக்கிறார் அதற்கு மூர்த்தி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார் உடனே மீனா நான் ஹாஸ்பிடலுக்கு போய் அப்பா எப்படி இருக்காருன்னு பாத்துட்டு வரேன்னு என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

ஹாஸ்பிடலுக்கு வந்த மீனாவிடம் மீனாவின் அம்மா எங்க மாப்பிள்ளை ரிலீஸ் பண்ணியாச்சா என கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் மீனா அப்பா கண்விழித்தாளோ பிரசாந்த் போலீசில் பிடிபட்டால் மட்டுமே  விடுவாங்க எனக் கூறுகிறார். உடனே மீனாவின் அம்மா தலையில அடித்துக் கொண்டு என் இரண்டு பொண்ணு வாழ்க்கையை நானே வினாக்கிட்டேனா அழுகிறார்.

pandian stores october 9
pandian stores october 9

உடனே மீனா தன்னுடைய அப்பாவிடம் அப்பா எழுந்திரிங்கப்பா என்ன நடந்துச்சுன்னு நீங்க வாயை திறந்து சொல்லுங்கப்பா எனக்கு ஒரு பிரச்சனைன்னா ஓடி வருவீங்களே இப்ப மட்டும் எப்ப படுத்து இருக்கீங்க சீக்கிரம் கண் விழிங்கள் அப்பா என அழுது கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியில் முல்லை வீடியோவை காட்டுகிறார் அப்பொழுது மீனாவின் அம்மா பார்த்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார்.

அதேபோல் சுஜாதாவும் கதறி அழுகிறார் உடனே நர்ஸ் உங்க அப்பா கண் விழித்து விட்டார் என கூறுகிறார்கள் ஜனார்த்தனனை பார்க்க ஓடி வருகிறார்கள் அனைவரும் அப்பொழுது ஜனார்த்தனன் கண்விழித்து உங்க ரெண்டு பேரு வாழ்க்கையை நானே வீணாக்கிட்டனே என அழுகிறார்.

அடுத்த காட்சியில் உடனே போலீஸ் வந்து வாக்குமூலம் கேட்கிறார்கள் ஜனார்த்தனன் வாக்குமூலம் கொடுக்கிறார். மற்றொரு பக்கம் மல்லி வீட்டிற்கு வந்து கதறி அழுகிறார் பிரசாந்தை போலீஸ் அரெஸ்ட் செய்கிறார்கள் எனக்கு புரியவே இல்லை என கூறுகிறார் உடனே நடந்த அனைத்தையும் மூர்த்தி மற்றும் முல்லையின் அப்பா கூறுகிறார் அப்பொழுது மல்லி அழுது கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது