முல்லையை பார்க்க புதிய வீட்டிற்கு வரும் முருகன், பார்வதி.! ஹோட்டலில் கடினமாக வேலை செய்யும் கதிர் – இன்றைய எபிசோட்.

விஜய் டிவியில் டிஆர்பி யில் டாப்பில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடர் குடும்பங்கள் மத்தியில் படும் பிரபலம். இந்த சீரியலை மக்கள் பலரும் விரும்பிப் பார்த்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர் தொடரில் இன்றைய எபிசோடில் கதிர், முல்லை..

இருவரும் புதிய வீட்டில் இருந்து வருகின்ற நிலையில் கதிர் நான் வேலைக்கு செல்கிறேன் என முல்லை இடம் கூறிவிட்டுச் செல்கிறார் முல்லை என்ன வேலை என்று கேட்கும் போது சூப்பர் மார்க்கெட்டில் கணக்கு எழுதுவது போன்ற வேலை என பொய் சொல்லிவிட்டு ஹோட்டலில் வேலை செய்து வருகிறார் கதிர்.

மேலும் கதிர் ஹோட்டலில் காய்கறி வெட்டுவது, சமையல் செய்வது, சாப்பாடு பரிமாறுவது, எச்சி இலை எடுப்பது போன்ற அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். இதை பார்த்த ஹோட்டல் முதலாளி நல்லா வேலை செய்கிறானே பையன் எனவும் கதிரையே கவனித்து பார்க்கிறார்.

மறுபக்கம் முல்லையை பார்க்க முல்லையின் அப்பா அம்மா இருவரும் புதிய வீட்டிற்கு வந்துள்ளனர். அந்த வீட்டில் மாட்டி இருந்த மூர்த்தி மற்றும் தனம் இருவரின் போட்டோவை பார்த்து பார்வதி இவங்க போட்டோவை ஏன் இங்க மாட்டி இருக்கீங்க என கோபப்படுகிறார் பின்பு முல்லை தனம் வந்து சென்ற விஷயத்தை சொல்லி சமாளித்து விடுகிறார். அப்பா அம்மா இருவருக்கும் சாப்பிட முல்லை நூடுல்ஸ் செய்து கொடுத்துள்ளார்.

பார்வதி நூடுல்ஸ் எனக்கு வேண்டாம் என கூற முருகன் நூடுல்ஸ் நல்லா இருக்கு சாப்பிடு என கூறுகிறார். மூர்த்தி வீட்டில் தனம் கடைக்கு சென்று உள்ளதால் மணி 12 ஆகிவிட்டது நம்ப தான் சமைக்கணும் போல என ஐஸ்வர்யா மீனாவிடம்  கூறியதும் மீனா நான் குழந்தைகளை பார்த்துக் கொள்கிறேன் நீ சமைத்துவிடு என கூறுகிறார் மேலும் குழந்தைகளை குளிப்பாட்டு போது மட்டும் ஐஸ்வர்யா நீ உதவி செய் என மீனா கூறுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது

Leave a Comment