பணத்திற்காக தன்மானத்தை விட்டுக் கொடுக்காத ஜீவா.! கண்ணன் செய்த வேலையால் கதறும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.! இன்றைய முழு எபிசோட்.!

இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோடில் கண்ணன் கிரெடிட் கார்டு மூலம் பல லட்சங்களை பணம் எடுத்து விட்டு கட்டாமல் விட்டு விடுகிறார் இதனால் பேங்க்காரர்கள் வீட்டிற்கு வந்து கண்ணனை அடிக்கிறார்கள் இதனால் ஆவேசம் அடைந்த கதிர் பேங்க்காரர்களை அடித்து விடுகிறார். அதன் விளைவாக போலீஸ் கதிரை அரெஸ்ட் செய்கிறது. கதிர் ஜெயிலில் இருப்பதால் அனைவரும் பதறுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் முல்லை கதறி கதறி அழுகிறார்.

இந்த நிலையில் பேங் காரர்களிடம் சமாதானம் பேசினால் கதிரை வெளியே எடுத்து விடலாம் என சமாதானம் பேச போகிறார்கள் ஆனால் கண்ணன் பணம் எடுத்தது மூனேகால் லட்சம்  கதிர் பேங்காரர்களை அடித்ததற்காக மொத்தமாக 5 லட்சம் கொடுத்து விட்டால் நாங்கள் கேசை வாபஸ் வாங்குகிறோம் என கூறுகிறார். 5 லட்சம் என கூறியதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் மூர்த்தி இவனுக்கு ஏன் இவ்வளவு பணம் 40000 சம்பளம் வாங்குறான் அது பத்தாதுன்னு இவ்ளோ கடன் வாங்கி வச்சிருக்கானே என மூர்த்தி கதறுகிறார் அதுமட்டுமில்லாமல் பணத்தைக் கேட்டு மூர்த்தி அங்கும் இங்கு அலைகிறார் ஜீவாவும் ஒரு பக்கம் பணத்திற்காக செல்கிறார். மூர்த்தி கடை பணம் அக்கவுண்டில் இருக்கிறது ஆனால் பேங்க் கிடையாது அவை நாளைக்கு தான் எடுக்க முடியும் அதனால் வேறு இடத்தில் தான் கேட்க வேண்டும் என ஒவ்வொரு ஆளிடமும் கேட்கிறார்.

அனைவரும் இன்று பேங்க் லீவு நாளைக்கு காலையில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என கூறுகிறார்கள் ஆனால் மூர்த்திக்கு பணம் இன்னைக்கே தேவை என்பதால் இன்னும் பலரிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் ஜீவா வீட்டிற்கு வருகிறார் எங்கே கதிர் என அனைவரும் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் வெளியே கொண்டு வர முடியலையா என்பதை போல் கேட்கிறார்கள். பிறகு 5 லட்சம் கொடுத்தால் தான் வாபஸ் வாங்குவேன் என பேங் காரர்கள் கூறியதை ஜீவா கூறுகிறார்.

ஜீவா தன்னுடைய மனைவி மீனாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார் ஜீவா தனக்கு தெரிந்த நண்பர்களிடம் பணத்தைக் கேட்க ஆரம்பிக்கிறார். அதற்கு மீனா யாருகிட்டவோ கேட்கிறத அப்பா கிட்ட கேட்கலாமே என கூற அதற்கு தன்மானத்தை விட்டுக் கொடுக்காத ஜீவா வேண்டாம் நாமலே பார்த்துக்கலாம் என கூறிவிடுகிறார்.

இந்த சமயத்தில் ஜீவாவின் மாமியார் பணம் வேண்டும் என்றால் நான் வேணா அவரிடம் கேட்கவா என கேட்க வேண்டாம் என ஜீவா மறுக்கிறார் சும்மாவே ஜீவாவை மட்டம் தட்டி பேசும் ஜனார்த்தனன் பணம் கொடுத்து விட்டால் இன்னும் மட்டம் தட்டி பேசுவார் என்பது தெரிந்து தான் ஜீவா வேண்டாம் என மறுக்கிறார். மற்றொரு பக்கம் ஜீவாவிற்கு அவருடைய நண்பர் 50,000 பணம் தருவதாக கூறி விடுகிறார்.

இப்படியே ஜீவா பணத்தை அரேஞ்ச் பண்ணி கொண்டு இருக்கிறார் அதேபோல் மூர்த்தியும் தனக்கு தெரிந்த அனைத்து இடத்திலேயும்  பணத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment