வளைகாப்பு நின்னதுக்கு காரணம் நீங்கதான் மனசாச்சி இல்லாமல் பேசும் ஐஸ்.! பணத்திற்காக கண்ணன் செய்த திருட்டு வேலை..! மூர்த்தியிடம் சிக்குவார..

இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோடில் ஐஸ்வர்யாவின் சித்தி வீட்டிற்கு வந்து பணம் கொடுக்கவில்லை என்றால் அவ்வளவுதான் என மிரட்டுகிறார். அது மட்டும் இல்லாமல் முழு பணத்தையும் கொடுக்க முடியவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாவது தாங்க உங்களுக்கு கடன் வாங்கி கொடுத்துட்டு நான் வீட்டை விட்டு வெளியே போக முடியுமா அப்படியெல்லாம் என்னால போக முடியாது நான் கைல கால்ல விழுந்தாவது உங்கள காமிச்சிட்டு என் வேலையை நான் பார்ப்பேன் என மிரட்டுகிறார்.

இவர்கள் இடையில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது முல்லை வருகிறார் ஆனாலும் அவரிடம் இருந்து தெரியாமல் மறைத்து விடுகிறார்கள் முல்லைக்கு சந்தேகம் வந்துவிட்டது ஏதோ ஒரு பிரச்சனை என்று தெரிந்து விடுகிறது. பிறகு கண்ணன் பேங்கில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது டாக்குமெண்ட் எடுத்துக்கொண்டு ஒருவர் வருகிறார் ஆனால் ஒரு டாக்குமெண்ட் சரியில்லை என்பதால் சைன் பண்ண மறுக்கிறார் கண்ணன்.

வெளியே நிக்கும் வாட்ச்மேன் டாக்குமெண்டை எடுத்துக்கொண்டு சைன் பண்ணி லஞ்சத்தையும் கொடுத்து விடுகிறார் லஞ்சத்தை வாங்க மறுத்த கண்ணன் பிறகு வேறு வழியில்லாமல் பணத்தை பையில் வைத்து விடுகிறார். அதே போல் மூர்த்தி ஜீவா இருவரும் பேசிக் கொள்கிறார்கள் வீட்டில் அனைவரும் நலமா என கேட்டுக் கொண்டு உள்ளார்கள். கண்ணன் வீட்டிற்கு வரும்போது பணத்தை கையில் எடுத்து பார்க்கிறார் லஞ்சம் வாங்குவதும் தவறு கடனை கொடுக்காமல் இருப்பதும் தவறுதான் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்தால் என்ன ஆகும் எனவும் யோசிக்கிறார்.

அந்த சமயத்தில் ஐஸ்வர்யா கால் செய்கிறார் கண்ணனிடம் கொஞ்சமாவது பணத்தை கொடுக்க வேண்டும் என்பதை கூறுகிறார் அதனால் கண்ணன் வேறு வழியில்லாமல் லஞ்ச பணத்தை கொடுப்பதற்கு முடிவுக்கு வருகிறார். கண்ணனை எதிர்பார்த்துக் கொண்டு ஐஸ்வர்யா வாசலிலேயே நிற்கிறார் அப்பொழுது தனம் அழைத்து வந்து உட்கார வைக்கிறார் அது மட்டும் இல்லாமல் முல்லையையும் அழைத்து உட்கார வைக்கிறார்.

அந்த சமயத்தில் வளைகாப்பு பேச்சை எடுத்ததற்கு ஐஸ்வர்யா உங்களால்தான் என் வளைகாப்பு நின்றது என்று கூறிவிடுகிறார் இதனால் முல்லை மிகுந்த கோபத்தில் இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் உங்களால தான் அவங்க ஜெயிலுக்கு போனாங்க கொஞ்சம் கூட வாய் கூசாம பேசுறியே என முல்லை திட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் தனமும் நீ வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டியா, பேசு என்ன பேசணும்னு தெரிஞ்சு தான் பேசுறியா என ஐஸ்வர்யாவை திட்டுகிறார்கள்.

உடனே ஐஸ்வர்யா பேங்க் காரர்களை மாமா அடிக்காம இருந்திருந்தா என் வழக்காப்பு நடந்திருக்கும் என கூற இன்னும் முல்லை கோபத்துடன் கொந்தளிக்கிறார் ஓவரா பேசுற  வாயிலே ரெண்டு போட்டா சரியாயிடும் என கூறிய அந்த சமயத்தில் மீனா வருகிறார் அவர் வந்து கண்ணனும் ஐஸ்வர்யாவும் வந்துட்டாங்கன்னு சொன்னீங்க அதான் பார்க்க வந்தேன் என கூற அதற்கும் உங்களிடம் கம்ப்ளைன்ட் பண்னுநாங்களா என ஐஸ்வர்யா பேசுகிறார் அதற்கு மீனா ஆமா கம்ப்ளைன்ட் பண்ணாங்க அதான் விசாரிக்க வந்தன் என நக்கலாக பதில் சொல்லுகிறார் நீ ஓவரா பேசுற என மீனாவும் அவரை பார்த்து கூறுகிறார்.

கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் அவங்களால் தான் வளைகாப்பு நின்னுடுச்சின்னு சொல்ற  கண்ணனா அவங்க அடிச்சதால் தானே அவங்க அடிச்சாங்க நீங்க பணத்தை வாங்கிட்டு திரும்ப கட்டாததால் தானே இவ்வளவு பிரச்சனையும் என முல்லை பேசுகிறார் அந்த சமயத்தில் மீனா அட்வான்ஸ் கொடுத்த அமௌன்ட் வாங்கியாச்சா மண்டபத்திற்கு என கேட்க அதிர்ச்சி அடைகிறார் ஐஸ்வர்யா.

Leave a Comment

Exit mobile version