யார் எப்படி போனா என்ன கடன அடைச்சாச்சு என பெருமூச்சு விட்ட ஐஸ்.! கடனைக் கேட்டு டார்ச்சர் செய்ய ஆரம்பித்த சித்தி.! டேய் கண்ணா உன் நிலைமை திண்டாட்டம் தான்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோட்டில் ஜெயிலில் இருந்த கதிரை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள் அப்பொழுது வீட்டிற்கு உள்ளே போக வேண்டாம் என கூறிவிட்டு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த கண்ணன் கையில் கிடைத்தால் அவ்வளவுதான் என  கதிரின் மாமியார் கூறுகிறார்.

கதிர் வீட்டிற்கு போகும் பொழுது கண்ணன் அருகில் தான் இருக்கிறார் தனம் மற்றும் கதிர் கண்ணனை அழைத்தாலும் கண்ணன் வர மறுக்கிறார் பிறகு  கண்ணன் அவர்  வீட்டிற்கு செல்கிறார் அங்கு போய் புலம்பி கொண்டிருக்கிறார். எல்லா தப்பும் என் மேல தான் நான் எதுக்குமே லாயக்கில்லை அண்ணன் சொல்ற மாதிரி உருப்படாதவன் எனக்கு எதுவுமே தெரியாது அந்த வீட்டில் இருந்த வரைக்கும் எவ்வளவு இன்கம் வருதுன்னு கூட தெரியாது ஆனால் சந்தோஷமாக இருந்தோம்.

நாம அங்கிருந்து வந்திருக்கக் கூடாது ஐஸ் நாம கல்யாணம் பண்ணும் பொழுது என்னோட அம்மா இறந்துட்டாங்க அப்பவே அண்ணன் வீட்டில் சேர்த்து விட்டது பெரிய விஷயம் மறுபடியும் இப்ப என்னால தான் குடும்பமே போலீஸ் ஸ்டேஷன்ல  என அழுது கொண்டே சொல்கிறார் அது மட்டும் இல்லாமல் ஐஸ் வயிற்றில் இருக்கும் பாப்பாவிடம் உங்க அப்பா ஒரு உருபிடாதவர் வேஸ்ட் எதுவுமே தெரியாதவன் என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் ஆப்போசிட்டில் ஜீவாவும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கதிர் இன்னைக்கு நடந்த விஷயத்துல எல்லாரும் சரியா சாப்பிட்டு இருக்க மாட்டாங்க வா சாப்பிடலாம் என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் மூர்த்தி நீ  மத்தவங்களுக்கு மட்டும் சாப்பாடு போடு கதிருக்கு சாப்பாடு போடாத நான் உருண்டை பிடிச்சு தரேன் என மூர்த்தி கூறுகிறார்.

இதை பார்த்த ஜீவா தனக்கு தர மாட்டாங்களா என்பதை போல் பார்க்கிறார் நீங்க எல்லாத்தையும் மறந்துட்டீங்க மாமா வீட்ல ஏதாவது ஒரு சம்பவம் நடந்துச்சுன்னா எல்லாருக்கும் தான் உருண்டை பிடிச்சு தருவீங்க ஆனா இப்ப அது மாதிரி தரலையே என  கூறுகிறார் உடனே மூர்த்தி எல்லாருக்கும் உருண்டை பிடிச்சு தரேன் என ஒவ்வொன்றாக ஒரு ஒரு ஆளுக்கா கொடுத்துக் கொண்டு வருகிறார் அப்பொழுது ஜீவாவிற்கும் கொடுக்கிறார் ஜீவா அதை வாங்கிக் கொண்டு கண் கலங்குகிறார் இதை கண்டுபிடித்து விடுகிறார் மீனா.

ஜீவாவை நக்கல் அடிக்கிறார் மீனா, அடுத்த காட்சியில் ஜீவா வீட்டிற்கு கிளம்புகிறேன் என கூற அனைவரும் வருத்தப்படுகிறார்கள். ஆனால் கயல் பாப்பா தனியாக இருக்கும் என்பதை காரணம் காட்டி விட்டு கிளம்புகிறார்கள். அதேபோல் கண்ணன் அழுது கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா யார் எப்படி போனாலும் பரவாயில்லை கடனை அடைச்சாச்சு என நிம்மதியாக பெருமூச்சு விடுகிறார்.

எனக்காக என் குடும்பம் ஐந்து லட்சம் யார் கிட்டயோ தூக்கிக் கொடுத்திருச்சு என கண்ணன் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி வருகிறார் நீ அப்படிலாம் நிம்மதியா இருக்க முடியாது என்கிட்ட வாங்குன கடனை எப்ப கொடுக்கப் போற என டார்ச்சர் செய்ய ஆரம்பிக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment