உண்மையை சொல்ல வந்த டாக்டர் தடுத்து நிறுத்திய மீனா..மூர்த்தியின் அதிரடி முடிவு

Pandian store : விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் அண்மையில் கண்ணன் மனைவி ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்தது. அவரைத் தொடர்ந்து அடுத்ததாக தனத்திற்கும் குழந்தை பிறக்க உள்ளது. தனத்திற்கு வலி வந்தது போல் டிராமா செய்து முல்லை குடும்பத்தையே மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு டாக்டர் தனத்தை பெட்டில் அட்மின் செய்ய சொல்லி விட்டனர். டாக்டர் மூர்த்தியிடம் தனத்திற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் கையெழுத்து போடுங்கள் என கேட்பதற்கு மூர்த்தி தனத்திற்கு குழந்தை பிறக்க இன்னும் நாளிற்கு அதற்குள் ஏன் ஆபரேஷன் செய்து எடுக்கணும் காலையில தான் தனத்திற்கு வலி வந்தது என மூர்த்தி சொல்லிக்கிட்டு இருக்கும்போதே மீனா மாமா டாக்டருக்கு தெரியாதா..

டாக்டர் சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும் அக்காவுக்கு ஆபரேஷன் செஞ்சிடலாம் நீங்க சைன் போடுங்க அப்படின்னு மீனா கேக்குறாங்க.. அப்புறம் டாக்டர் தனியா மீனா கிட்டயும் முல்லை கிட்டயும் எப்படி தனத்தோட வீட்டுக்காரருக்கு தெரியாம பிரஷ் கேன்சர சரி பண்றது இதெல்லாம் ரொம்ப தப்புன்னு சொல்றதுக்கு மீனா நாங்க எப்படியாவது அவங்களை சமாளிக்கிறோம்..

டாக்டர் நீங்க ஆப்ரேஷன் பண்ணுங்க வேணா நான் சைன் போடுறேன்னு மீனா சொல்றாங்க.. இன்னொரு பக்கம் வீட்ல கண்ணனும் ஐஸ்வர்யாவும் அவங்களோட குழந்தையும் முல்லையோட குழந்தையையும் பார்த்துட்டு இருக்காங்க அப்ப தனத்தோட அண்ணி வீட்டுக்கு வந்து என்ன இந்த வீட்ல யாருமே சொன்ன டேட்டுக்கு குழந்தை பெத்துக்கல எல்லாமே முன்னாடியே குழந்தை பெத்துக்கிறீங்க..

அப்படின்னு நக்கலா பேசிட்டு இருக்காங்க அப்புறம் அவங்க வீட்டுக்காரருக்கு போன் பண்ணி தனத்துக்கு வலி வந்து ஹாஸ்பிடல் போய் இருக்காங்கன்னு சொல்றதும் தனத்தோட அண்ணனும் அம்மாவும் பதட்டமாக ஹாஸ்பிடலுக்கு வந்துட்டாங்க அங்க திரும்ப மூர்த்தி டாக்டர் கிட்ட போயி ஆப்ரேஷன் பண்ணியே ஆகணுமா டாக்டர் என்று கேட்டுட்டு இருக்கும்போதே மீனா வந்து டாக்டர் மூர்த்தி கிட்ட எந்த உண்மையை சொல்லவிடாமல் தடுத்து விடுறாங்க இதோட இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.

Leave a Comment