ஜீவாவை தொடர்ந்து கண்ணனையும் அசிங்கப்படுத்தும் ஜனார்த்தனன்.! மூர்த்தியிடம் உண்மையை கூறிய தனம்.! பரபரப்பாகும் எபிசோட்.

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கண்ணன், ஐஸ்வர்யா மற்றும் அவரின் சித்தி மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ஐஸ்வர்யா ஐஸ் வைத்து அவரின் சித்தியிடம் வளைகாப்பு நடத்துவதற்கு பணம் கேட்டுக் கொண்டிருக்கிறார் அதற்கு என்னிடம் எது பணம், பணம் இருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன் எனக் கூற  அதற்கு ஐசு உங்க நகையவா கேட்டேன் பணம் தானே கேட்கிறேன் யார்கிட்டயாவது வாங்கி கொடுங்க ஒரே மாதத்தில் கொடுத்திடலாம் சேனல் பெருசானதும் கொடுத்திடலாம் என கூறுகிறார்.

அதெல்லாம் கரெக்ட் தான் எப்படி கொடுப்பீங்க என கேட்க இந்த வீடியோவை சேனல்ல போட்டு நம்ம காசு பார்த்துடலாம் என கூறுகிறார் அதற்கு அவரின் சித்தி பணம் வட்டிக்கு தான் வாங்கி தருவேன் என கூறுகிறார். அடுத்த காட்சியில் தனம் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது மறுபடியும் நெஞ்சுவலி வருகிறது அந்த நேரத்தில் முல்லை வந்து என்னாச்சு அக்கா எனக் கேட்க மறுபடியும் நெஞ்ச கரிக்குது என கூறுகிறார்.

அடுத்த நாள் காலையில் சமைப்பதற்கு காய்கறி வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வருகிறார்கள் அவர்களை உட்கார வைத்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது வளைகாப்பு நடத்துவதை பற்றி கூறிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு நாங்களும் பிளான் பண்ணி இருந்தோம் அடுத்த மாசம் பண்ணிடலாம் என கூற இல்ல நாங்களே எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டோம் மிகப்பெரிய மண்டப பெயரை கூற அதற்கு அதிர்ச்சடைகிறார்கள் அங்கு காசு அதிகமா இருக்குமே என கேட்க ஆமா கொஞ்சம் அதிகம் தான் என கூறுகிறார்கள்.

பணம் இருக்கிறதா என கேட்க கண்ணன் பணம் இருக்கிறது அதெல்லாம் சமாளிச்சிடலாம் என கூறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த காட்சியில் மூர்த்தி வருகிறார் அவரிடம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வளைகாப்பு வைத்துள்ளதை கூறுகிறார்கள் அவர்கள் தான் தனியாவே சம்பாதிக்கிறார்கள் அவங்களே பாத்துக்கிட்டும் நாம எதுவும் செய்ய முடியாது என கூறிவிட்டு கிளம்புகிறார்.

பிறகு ஜீவாவை பார்ப்பதற்கு கண்ணன் வருகிறார் அங்கு வளைகாப்பு வைத்துள்ளதை கூறிக் கொண்டிருக்கும் பொழுது ஜனார்த்தனன் வந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் மிகப்பெரிய மண்டபம் அதற்கு ஒரு லட்சம் ஆகுமே என கேட்க அதெல்லாம் அட்வான்ஸ் கொடுத்தாச்சு அப்புறம் சமையல் செலவு வேற இருக்கு என ஜனார்த்தனன் கேட்க அதையும் புக் பண்ணியாச்சு எனக் கூறுகிறார் அந்த சமயத்தில் ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தாலேயே அந்த மண்டபத்தில் பண்ண முடியாது ஆனா நீங்க தனியா நின்னு பண்றீங்களே எல்லாத்துக்கும் பணம் இருக்கா என கேட்க அதெல்லாம் பிரச்சனை இல்லை பணம் இருக்கு எனக்கு கூறுகிறார் கண்ணன்.

ஆனால் ஜனார்த்தனன் ஒவ்வொரு வார்த்தையும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை அசிங்கப்படுத்துவது போல் பேசுகிறார் இதை கவனித்துக் கொண்டிருக்கிறார் ஜீவா இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment