உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். சீனாவிலுள்ள ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது. இதனை தடுக்க சீன அரசாங்கமும் மற்றும் உலக சுகாதார மருத்துவ குழுவும் இதற்கான மருந்தை தீவிரமாக கண்டுபிடித்து வருகின்றனர். தற்பொழுது வரை சுமார் 24 நாடுகளில் பரவி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ் நோயினால் இதுவரை 82 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் இந்தியாவை பொருத்தவரை 4789 பேருக்கு பாதிப்பு உள்ளது இதுவரை இந்தியாவில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழகத்தை பொறுத்தவரை 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் அதில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் சினிமா மற்றும் பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோ, நன்கொடை, நிதி உதவி என அளித்து வருகின்றனர். இந்தநிலையில் பாண்டியன் ஸ்டோர் நடிகை முல்லை அவர்கள் ”கொரோனா சென்று விடு என்று கெஞ்சி” புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
![chitraa](https://www.tamil360newz.com/wp-content/uploads/2020/04/chitraa.jpg)
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஜோடிகள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிடித்தமான ஜோடிகள் கதிர், முல்லை ஜோடிதான் ரசிகர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் பிடித்தமான ஜோடியாக இருந்து வருகின்றனர்.