“பாண்டியன் ஸ்டார்” சீரியல் புதிதாக என்ட்ரியாகும் நபர்.! யாரு டா அது.? வைரலாகும் புகைப்படம்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகச்சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்.  இந்த சீரியலில் இருக்கும் அனைவருக்கும் சிறப்பான கதை பொருந்தி உள்ளதோடு தேவையில்லாமல் இழுக்காமல்  என்ன சொல்ல வருமோ அதை சரியாக சொல்லி சீரியலை மிக நேர்த்தியாக நகர்த்தி செல்லுவதால் இந்த சீரியல் தற்போது இல்லத்தரசி களையும் தாண்டி தற்போது அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஒரு வீட்டில் பிரச்சனை மற்றும் இன்ப துன்பங்களை நடக்கும் என்பதை  கதையாக எடுத்துரைத்துள்ளது. மேலு முக்கிய நடிப்பவர்களுக்கு என ஒரு கணவன் மனைவி இருப்பதால் அவங்களுக்குள்ள என்ன நடக்கும் என்பதையும்,  அண்ணன் தம்பி பாசத்தையும்  எடுத்துரைக்கிறது.

இந்த சீரியல் முடியவே முடியாது கூடாது என்று பலரும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு இந்த சீரியல் மக்கள் வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு புதிய நடிகை ஒருவரும் களமிறங்க உள்ளார்.

தற்போது இந்த சீரியல் பிளாஷ் பேக் ஸ்டோரி ஓடிக் கொண்டு இருக்கிறது சத்தியமூர்த்தியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மண்டபத்திலிருந்து ஓடிச்சென்ற மல்லிகா கதாபாத்திரம் தான் தற்போது மீண்டும் இந்த சீரியலில் என்ட்ரி ஆக உள்ளது.

இந்த நிலையில் அவருடன் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இவர் தற்பொழுது இந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் காலடி எடுத்து வைத்தால் என்ன பிரச்சனை எங்கே நடக்கப்போகிறது தற்பொழுது சீரியல் பார்ப்பவர்கள் கணக்கு போடத் தொடங்கி உள்ளனர். இனி இந்த சீரியலில் பல ட்விஸ்ட்கள் இருக்கம் என தெரிகிறது.

Leave a Comment