கைக்குழந்தையுடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிஃபர்..! இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுமே திரைப்பட டைட்டில்களை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விஜய் டிவியில் ராஜா ராணி மௌன ராகம் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்நிலையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் ஆக அமைந்தது தான் பாக்கியலட்சுமி சீரியல்.

இவ்வாறு இந்த சீரியலில் ராதிகா என்ற வேடத்தில் முதல் முதலாக நடித்து வந்தவர் தான் நடிகை ஜெனிஃபர். இவ்வாறு பிரபலமான நமது நடிகை இரண்டாவது முறையாக கர்ப்பமானதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

ஆனால் இவர் சீரியலில் இருந்து வெளியேறின பிறகுதான்  அவர் கர்ப்பமாக இருந்தார் என்பதை தன்னுடைய கணவருடன் சேர்ந்து சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்தார். இவ்வாறு அவர் சீரியலில் நடிக்காமல் இருந்த நாட்களில் தன்னுடைய குழந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இந்நிலையில் நமது நடிகைக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமூக வலைதள பக்கத்தில் தனக்கு குழந்தை பிறந்ததை அறிவித்த ஜெனிஃபர் இதுவரை குழந்தையின் முகத்தை யாரிடமும் காட்டியது கிடையாது.

jenifer-2

அதே போல அவரும் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதும் குறைந்து போய்விட்டது இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய குழந்தையுடன் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வாறு வெளியான புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Exit mobile version