பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகும் பிரபலம்.! விஜய் டிவியின் டிஆர்பி அவ்வளவு தானா..?

விஜய் டிவியில் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் சமீப காலங்களாக சுவாரஸ்யமான கதைய அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் ராதிகா பாக்யா இருவருக்கும் இடையே செக்ரட்டரி தேர்தல் நடைபெற்று வருவதை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி போட்டியிட்டுக் கொண்ட நிலையில் அதில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ராதிகாவை தோற்கடித்து பாக்கியா ஜெயித்துள்ளார். எனவே இதனால் ராதிகா, கோபி இருவருக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வீட்டிற்கு சென்றவுடன் ராதிகா இந்த அவமானம் எனக்கு தேவைதானா நான் தேர்தலில் நிற்கிறேன் என உங்களிடம் கேட்டேனா உங்களை யாருக்குமே தெரியவில்லை என மிகவும் கேவலமாக கோபியை திட்டுகிறார். ஆனால் பாக்யா தன்னுடைய குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக இருக்கும் நிலையில் வீட்டுக்கு வந்தவுடன் மாலை போட்டு ஆரத்தி எடுத்து வீட்டிற்கு அழைக்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் கேண்டீன் நடத்துவதற்காக 7 லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்ட நிலையில் அதனையும் ஆபீசர் நான் தருவதாக கூறியுள்ளார் இதன் காரணமாக அனைவரும் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

chellama
chellama

அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை திவ்யா கணேஷ். இவர் பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து செல்லம்மா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது திவ்யா செல்லம்மா தொடரிலிருந்து விலகி உள்ளாராம் அவருக்கு பதில் நடிகை ஸ்ரேயா என்பவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment