சீரியலில் இப்படியும் கூட நடக்குமா.! அட கொடுமையே பல மாதங்கள் கழித்து உண்மையை போட்டுடைத்த பகல் நிலவு விக்னேஷ்.!

pakal nilavu : மாபெரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் விக்னேஷ் ஆவார். விஜய் டிவியில் சமீபகாலமாக படத்தின் பெயர்களில் ஒளிபரப்பான ராஜா ராணி, சின்னதம்பி, மௌனராகம், ஆயுத எழுத்து உட்பட இன்னும் பிரபலமடைந்த பல சீரியல்கள் உள்ளது. அதில் ஒன்று தான் பகல் நிலவு  சீரியல் ஆகும். இந்த சீரியலில் சௌவுந்தர்யாவுக்கு ஜோடியாக விக்னேஷ் அவர்கள் நடித்திருப்பார்.

இந்த சீரியல் 2016ஆம் ஆண்டில்  தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்நிலையில் அதே சீரியலில் அன்வர் மற்றும் சமீரா  என்ற ஜோடியும் நடித்து வந்தனர். இவர்களின் காட்சியே சீரியலில் அதிகமாக இடம்பெற்றது . இச்சிரியலில்  நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் காதலித்து வந்தனர். சிறிது காலம் கழித்து இருவரும் சீரியலை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் விக்னேஷ் சௌந்தர்யா இந்த ஜோடியும் சீரியலை விட்டு வெளியேறிவிட்டனர்.

விக்னேஷ் அவர்கள் சிறிது காலமாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அதில் ரசிகர் ஒருவர் பகல் நிலவு சீரியலை விட்டு ஏன் பாதியிலேயே வெளியேறிவிட்டார்கள் என கேட்டதற்கு நானாக வெளியேறவில்லை .சிலர் செய்த சதியால் விலகிவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

நான்கு மாதத்திற்கு முன்னரே நானும், விக்னேஷ் கார்த்திக் அவர்களும்  வெளியேறுவதைப்  பற்றி முடிவெடுத்து விட்டோம் ,அதுமட்டுமல்லாமல் கதையில் அதிக மாற்றம் செய்து கொண்டே இருந்தன அதனை நான் விரும்பவில்லை எனக் கூறி உள்ளார்.

Leave a Comment