அந்நியன் படப்பிடிப்பில் பாறை மீது வரையப்பட்ட ஓவியம் .! பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான்.!

வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகர் என பெயரெடுத்து தற்பொழுது தமிழ் சினிமா உலகில் மிகவும் உச்ச நட்சத்திரமாக அதிக ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் விக்ரம் இவர் சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய திரைப்படம் என்றால் அது சேது திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைத்தது என்று கூட கூறலாம்.

சேது திரைப்படத்திற்கு முன்பு விக்ரம் நடித்த பல திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை தறவில்லை பல திரைப்படங்களும் தோல்வி அடைந்த நிலையில் சேது என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்தார்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் தற்பொழுதும் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

மேலும் இவரது திரைப்பயணத்தில் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது அந்நியன் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்த விக்ரம்,பிரகாஷ்ராஜ்,விவேக் போன்ற பலரும் தற்போது ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இந்த திரைப்படம் வசூல் ரீதியாக சுமார் பல கோடி வசூல் செய்து விட்டது.மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படத்தில் வரும் அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடல் தற்போது வரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாக அமைகிறது இந்த பாடலில் ஒரு காட்சியில் மட்டும் பாறைகள் மீது எம்ஜிஆர்,சிவாஜி,ரஜினிகாந்த்,கமல் போன்ற நடிகர்களின் படங்களை வரைந்து வைத்திருப்பார்கள்.

rajini2
rajini2

16 வருடங்கள் கழித்து இந்நிலையில் ஷங்கர் அந்த படத்தில் வைத்த ஓவியங்களான சிவாஜி,எம்ஜிஆர்,ரஜினிகாந்த்,கமல் ஆகிய நான்கு பேரையும் பாறையின் மீது வரைந்து வைத்திருந்த புகைப்படங்கள் அப்படியே இருக்கிறது இதனை ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

rjini
rjini

ஒரு சில ரசிகர்கள் 14 வருடங்கள் கழித்தும் அந்த புகைப்படங்கள் அப்படியே இருக்கிறதா என ஷாக்காகி இந்த புகைப்படங்களை பார்த்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இது ஷங்கரின் கை வண்ணம் அப்படி தான் இருக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment