பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் கோபி செய்த மிகப்பெரிய உதவி.! யாருக்குத் தெரியுமா? பாராட்டு மக்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கொரோனா காரணத்தால் பல சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஒரு சில சீரியல்கள் கதை முழுவதுமாக மாற்றப்பட்டு அதே சீரியல் பெயருடன் ஒளிபரப்பாகிறது.

இன்னும் சில சீரியல்கள் புதிதாக அறிமுகமாகிவுள்ளது.அந்த வகையில் புதிதாக அறிமுகமாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஒரு குடும்பப் பெண் எவ்வளவு பிரச்சினைகளையும்,அவமானங்களைம் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி உள்ளவர் சதிஷ்.  இவர் கோபி கதாபாத்திரத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார்.  இவர் தற்பொழுது தனது மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை அறிந்து அவரின் சின்ன மகன் கோபியை திரட்டி வருகிறார். இந்த எபிசோடு தான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

எனவே ரசிகர்கள் கோபியை கமெண்டுகளில் தீட்டி வருகிறார்கள். எனவே ஆத்திரமடைந்த கோபி பணம் கொடுக்கிறார்கள் அவர் சொல்லும்படி நான் நடிக்கிறேன் அதற்கு ஏன் என்னை இப்படி திட்டுகிறார்கள் என்று மிகவும் கோபமடைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்  பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்பொழுது ப்ளாஷ் பேக் கதையின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.அது மட்டுமல்லாமல் இன்னும் சில நாட்களில் பிளாஷ் பேக் காட்சியை ஒளிபரப்பவுள்ளார்கள். அந்த வகையில் பிளாஷ் பேக் கதையில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் பையனின் அம்மா இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

எனவே அந்த பையனை நேரில் பார்த்து சதீஷ் உன் அம்மா அப்பாவாக நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறி உள்ளா.ர் இவ்வாறு இவரின் நல்ல எண்ணத்திற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை கூறிவருகிறார்கள்.  இதோ அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம்.

Leave a Comment