அருவா வேற, யானை வேற, உண்மையை போட்டு உடைத்த பிரபல இயக்குனர் ஹரி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் ஹரி கூட்டணியில் சிங்கம், சிங்கம் 2 ,என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் நல்ல வெற்றியும் பெற்றது.

அந்த வகையில் தற்போது இயக்குனர் ஹரி அவர்கள் தற்போது அருண் விஜய்யை வைத்து யானை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் டீஸர் சமிபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் நேற்று டிரைலர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அருண் விஜய் நடித்து உள்ள யானை திரைப்படம் நல்ல குடும்ப பாங்கான சென்டிமென்ட் உடன் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, சமுத்திரகனி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அதை அடுத்து ஹரி அவர்களை ஒரு பத்திரிகையாளர் இந்தப்படம் சூர்யாவை வைத்து தானே எடுக்கிறதா இருந்தீங்க எனக் கேட்டுள்ளார் அதற்கு அருவ அங்குதான் இருக்கும் அதை யாரும் எடுக்க முடியாது என கூறி உள்ளார். அருவா திரைப்படம் சில பிரச்சனையின் காரணமாக பட பிடிப்பு பாதியில் நிறுத்தி வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதிலிருந்து தெரிகிறது அருவா வேறு  யானை திரைப்படம் வேற என்று. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் ஹரிக்கும் பிரச்சனையின் காரணமாக திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் இயக்குனர் ஹரி.

Leave a Comment