எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவர் எஸ். ஜே. சூர்யா.! இப்ப அவர் பண்றது சரியில்ல – பேட்டியில் அஜித் கூறிய தகவல்.

திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் பலருக்கு கை கொடுத்து தூக்கி விட்டவர் அஜித் குறிப்பாக திறமை உள்ள பல இளம் இயக்குனர்களுக்கு முதல் படத்தை கொடுத்து தூக்கி விட்டவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது அவர்களில் ஒருவர் எஸ் ஜே சூர்யா.

எஸ் ஜே சூர்யா உதவி இயக்குனராக இருக்கும்போதே அவரது திறமையைப் பார்த்து அஜித் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் அப்படி உருவான திரைப்படம் தான் வாலி இந்த திரைப்படம் அப்போது வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன், விவேக், ஜோதிகா போன்ற நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பேசிய எஸ் ஜே சூர்யா விஜயை வைத்து குஷி என்னும் சூப்பர் ஹிட் படத்தையும் கொடுத்தார் தொடர்ந்து இரண்டு படங்களை கொடுத்த நிலையில் மூன்றாவதாக படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எஸ் ஜே சூர்யாவும் சினிமாவுலகில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் ஆனால் ஆரம்பத்தில் இவரது படங்கள் எல்லாம் தோல்வியை தழுவின.

இருப்பினும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதால் தொடர்ந்து நடித்தார் தற்போது சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவுலகில் ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சினிமாபயணத்தில் ஒரு தடவை எஸ் ஜே சூர்யா குறித்து அஜித் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது.

எஸ் ஜே சூர்யா ஒரு திறமையான இயக்குனர் அவர் படத்தை இயக்கும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறினார் மேலும் அவர் தொடர்ந்து படத்தை இயக்குவார் என எதிர்பார்த்தேன் ஆனால் அவர் நடிப்பில் கவனம் செலுத்தி விட்டார் ஒரு சிறந்த இயக்குனர் சிறந்த படங்களை கொடுத்தால் சூப்பர் ஆனால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் கவனம் செலுத்தியது சற்று வருத்தமாக இருப்பதாக கூறினார் ஆனால் எஸ் ஜே சூர்யா இப்போது படங்களை இயக்குவதையும் தாண்டி நடிக்கத்தான் செய்கிறார் அதுவும் மக்களுக்கு பிடித்துப் போய் உள்ளதால் தொடர்ந்து அதிலேயே கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment