ஒரே ஒரு இரவு பார்ட்டி தான் என் வாழ்க்கையவே மாத்திடுச்சு.! இப்ப எனக்கு குழந்தையும் இருக்கு… பிரபல நடிகை வெளிப்படை பேச்சு..

நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவே காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அவபோது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் நடிகை சினேகா அடிக்கடி தனது குடும்பங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சினேகா அவர்கள் ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். அதாவது தனக்கு எப்படி சினிமாவில் வாய்ப்பு பெற்று உள்ளே நுழைந்தேன் என்பது குறித்து சினேகா அவர்கள் பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா இவர் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாகவே வளம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், அஜித், சிம்பு என பல முன்னணி நட்சத்திர பட்டாளங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் திருமணத்திற்கு பிறகு சரியாக படங்களில் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை சினேகா அவபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கையே ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதால் தான் மொத்தமாக மாறியது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது ஒரு முறை மலையாள ஸ்டார் நைட் என்ற நிகழ்ச்சியை பார்க்க சென்றோம் அப்போது அங்கு உள்ளவர்கள் சினேகாவை பார்த்து யார் இவங்க ஹீரோயின் போலவே இருக்காங்களே என்று கூறி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார்களாம்.

அப்படி நடிகை சினேகா முதல் முதலாக மலையாள சினிமாவில் நடித்திருந்தாலும் அந்த படம் பெரிய அளவிற்கு ஓடவில்லை அதன் பிறகு தமிழில் விரும்புகிறேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் நடிகை சினேகாவிற்கும் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறி இருக்கிறார்.

Leave a Comment