ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வசூல் வேட்டையில் எவ்வளவு கல்லா கட்டியது தெரியுமா.? இணையத்தில் வெளிவந்த புதிய தகவல்.!

தமிழ் சினிமா உலகில் இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூற வேண்டும் அதனால் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகவும் படுதோல்வி அடைந்தது.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கார்த்திக்,ஆண்ட்ரியா,பார்த்திபன்,ரீமாசன் போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவானது.

இதனையடுத்து இந்த திரைப்படம் சென்ற வருடம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆனது அப்பொழுது வசூல் வேட்டையில் சுமார் 1.5 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்ததாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உருவாகப் போகிறது என சமீபத்தில் கூட அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.இதனையடுத்து இந்த திரைப்படமாவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெருமா,பெறதா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

karthik

Leave a Comment

Exit mobile version