ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா..? இணையத்தில் லீக்கான வசூல் நிலவரம்..!

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த  ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தாலும் இந்த படம் வெளியான அந்த ஆண்டு தோல்வி படமாக அமைந்தது.

2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மாறுபட்ட கதை அம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படத்தில் கார்த்திக்கின் எதார்த்தமான நடிப்பும், பார்த்திபனின் எதார்த்தமான பேச்சும் இன்றுவரைக்கும் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களிக்கின்றனர்.

இந்தநிலையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் முன்னணி நடிகரான தனுஷ் அவர்கள்  நடிக்கவுள்ளார் என்றும் கூறிவருகின்றனர்.

aayirathil oruvan
aayirathil oruvan

மேலும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதைப்பற்றி வேறு எந்த ஒரு அப்டேட்டும்  வெளிவரவில்லை. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தோல்வியை தழுவி இருந்தாலும் இந்தப் படம் உலகமெங்கும் வெளியாகி சுமார் 53 கோடி வரை வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை கொடுத்து வந்தாலும் ஒரு பக்கம் ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Comment