விஜய் ரசிகரை வைத்து விஜயை வம்புக்கு இழுக்கும் மீரா மீதுன்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவரது நடிப்பு மற்றும் சமூக அக்கறையின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது படத்தை திருவிழா போல கொண்டாடுவது ரசிகர்களுக்கு வழக்கமான ஒன்றுதான் அப்படி இவரது திரைப்படங்கள் திரைஅரங்கில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் அதனை கொண்டாடி பாக்ஸ் ஆபிசில் நம்பர் ஒன்றாக சேர்த்து விடுகின்றனர் அவரது ரசிகர்கள். அத்தகைய ரசிகர்களுக்காக தளபதி விஜய் அவர்கள் தன்னால் முடிந்த சில நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

இதன் மூலம் என்னவோ அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அப்படிப்பட்ட ரசிகர்களில் ஒருவர் தான் கள்ளகுறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிவந்தியம் அப்பகுதியை சேர்ந்த பாலா இவர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இவர் இறப்பதற்கு முன்னால் தலைவன் படம் பார்க்க போறேன் என்று விஜய்யை டேக் செய்து செய்திருக்கிறார்.

இவர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை இறப்பதற்கு முன்பாக  போட்ட பதிவுகள் சில  நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா, அந்த கடவுளுக்கு கூட பிடிக்காது போல என்ன வாழ்க்கைடா, எதுக்கு பொறக்கணும்,  யாருக்காக நாம வாழனும்னு, அப்போ போ சந்தோஷத்தைக் கொடுத்து பரிச்சுக்கிட்டு இருக்காங்க அந்த கடவுள் இதுக்கு மேல என்னால முடியாது மொத்தமா போல்டரில் அப்போதிருந்த எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம்.

கண்ணுல இருந்து தண்ணி அதுவா வருது ,உள்ள எவ்வளவு வலி இருக்கும் என்று அப்பதான் எனக்கே தெரியுது கடைசில நானும் இப்படி புலம்ப ஆரம்பித்து விட்டேன் ஒரு மனுஷனா எவ்வளவு வலியை தன் தாங்குவேன் என் வாழ்க்கையில ஃபுல்லா இழப்புகள் மட்டும் தான் இருக்கு வந்துட்டு தான் இருக்கேன் ஆனா இப்போ உனக்கு சந்தோஷமே கிடையாதுடா ஒன்னு கடவுள் நினைச்சுட்டேன் போல. என்னையும் மதிச்சி இவ்வளவு நாள் சப்போர்ட் பண்ணனும் உங்கள் எல்லோருக்கும் நன்றி என பதிவிட்டார்.

https://twitter.com/meera_mitun/status/1296032751376723969?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1296032751376723969%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Ftamil.behindtalkies.com%2Fbigg-boss-meera-mithun-shocking-video-about-vijay-fan-suicide%2F

இதுகுறித்து பேசியுள்ள மீரா மிதுன் அவர்கள் விஜய் ரசிகர்களின் தற்கொலையை கூட பெரும் பேசும் பொருளாக மீடியாக்கள் காட்டுகிறது. அந்த ரசிகர் வீட்டை பார்த்துக் கொள்ளாமல், ஒரு நடிகரைப் பற்றி தினமும் பேசிக்கொண்டு வேலை வெட்டியை பார்க்காமல் இருந்து இருப்பார் அதனால் அவரது வீட்டில் திட்டி இருப்பார்கள் அதனால் தான் அவர் தற்கொலை செய்திருப்பார் என்று கூறினார் மீராமதுன்.

Leave a Comment