“புளுசட்டை மாறன்” தயாரிக்கும் படத்தை பார்த்துவிட்டு சென்சார் தர மறுத்த அதிகாரிகள்.! குழம்பி கடக்கும் படக்குழு.

திரை உலகில் ஆண்டுதோறும் பல திரைப்படங்களில் வெளிவந்தாலும் அதை எடுக்க இயக்குனர் தொடங்கி அடிமட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் தனது கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்படி திரையரங்குகளில் வெளிவரும் படத்தை விமர்சனம் என்ற பெயரில் படத்தை கழுவி ஊற்றி அந்தப் படத்தின் வெற்றி தோல்வியை இவர்களே ஒருகட்டத்தில் தீர்மானிக்கின்றனர்.

மேலும் படத்தின் பாசிடிவை விட்டுவிட்டு படத்தில் நெகட்டிவ் ஐ கூறி மக்கள் மத்தியில் திடீரென பிரபலம் அடைந்து விடுகின்றனர் விமர்கர்கள்.

அந்த வகையில் புளு சட்டை மாறன் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் இவர் புதிய படங்களை விமர்சித்து கழுவி உற்றுவதில் அதில் வல்லமை படைத்தவராக இருந்துவருகிறார்.

அதிலும் குறிப்பாக அஜித் ரஜினி விஜய் போன்ற டாப் நடிகர் படங்களை குறை கூறுவதையே பெரிதும் தொழிலாக வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது ஒரு புதிய திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

படத்தின் பெயர் “ஆன்ட்டி இந்தியன்” பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது இந்த படத்தில் அவரே ஒரு முக்கிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மேலும் இவருடன் இணைந்து தமிழ் சினிமாவின் டாப் நடிகரான ராதாரவி மற்றும் நடிகர் நரேன் ஆகியோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது போஸ்ட் புரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்தது ஆனால் சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் தர மறுத்து உள்ளதால் தற்போது செம கடுப்பில் இருந்த வருகிறது படக்குழு.

இதனையடுத்து அந்த படகுழு டிரிபியூனலுக்கு செல்வார்களா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் அப்படியும் கிடைக்கவில்லை என்றால் ப்ளூ சட்டை மாறன் இந்த திரைப்படத்தை OTT தளத்திற்கு கொடுத்து விடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment