என் மகன் வீட்டிற்கு வரும் வரை வேலையாட்கள் யாரும் இந்த ஒரு விஷயத்தை தப்பி தவறி கூட செய்ய கூடாது – உத்தரவு போட்ட ஷாருக்கான் மனைவி

இந்தி சினிமாவில் கிங்காங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இளம் வயதிலேயே சினிமா உலகில் கால் தடம் பதித்து இருந்தாலும் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் ஹிந்தி சினிமாவையும் தாண்டி பல மொழிகளில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழில் இவர் உயிரே, அசோகா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது தற்போது கூட அட்லி இயக்கும் ஒரு புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் இந்த படத்தில் அவருடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையின் தாண்டி சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் கலந்து மக்களை மகிழ்வித்தவர்.

இது மட்டுமில்லாமல் பல விளம்பர படங்கள் மற்றும் கிரிக்கெட் என எல்லாவற்றிலும் கால் தடம் பதித்து வெற்றியைக் கண்டு வந்த இவர் கௌரி கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்கள் இருவருக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் போதைபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜெயிலில் இருக்கிறார். அவரால் சாருக்கான் தற்போது பல கோடிகளை இழந்து நிற்கிறார்.

காரணம் இவர் பைஜூஸ் போன்ற பல டாப் நிறுவனங்களுக்கு விளம்பர படங்களில் நடித்து வந்தார் ஷாருக்கான். மகன் போதை பொருள் வியாபாரத்தில் மாட்டியதை உணர்ந்த அந்த நிறுவனங்கள் தற்போது அதிலிருந்து ஒப்பந்தத்தை நிறுத்திக் கொண்டது இது போனாலும் பரவாயில்லை என கூறி தனது மகனை காப்பற்ற அவர் தற்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார்.

இவரை விட அவரது மனைவி கௌரி கான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் எப்பொழுதும் விசேஷ நாட்கள் என்றால் ஷாருக்கானின் வீடு மின் விளக்கால் அலங்கரிக்க பட்டு ஜொலிக்கும் ஆனால் ஆயுத பூஜையின் போது கூட மிகப் பெரிய அளவில் எதுவும் செய்யாமல் நோன்புயிருந்து பூஜை செய்தார் தற்போது தீபாவளி வரை இருக்கிறது அதற்குள் தனது மகன் வீட்டுக்கு வர வேண்டும் என தனது தெரிந்தவர்களுடன் பேசி கேட்டுக்கொண்டு வருகிறார்.

ஷாருக்கானும் அதையே குறி வைத்துள்ளார் தீபாவளிக்குள் தனது மகனை எப்படியாவது வீட்டுக்கு வரவழைத்து விட வேண்டும் என தனது நெருங்கிய நடிகர்கள் மற்றும் பிரமுகர்கள் என எல்லாரிடமும் பேசி வருகிறாராம். என் மகன் வீட்டிற்கு வரும் வரை எந்த ஒரு இனிப்பையும் செய்யக்கூடாது என வேலையாட்களுக்கு உத்தரவிட்டுள்ளார் கௌரி கான். எனது மகன் வந்த பிறகு இனிப்புகள் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கிறதாம் அது நிச்சயம் தீபாவளிக்குள் நடந்தால் சிறப்பாக இருக்கும் என அவரது குடும்பத்தினர் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

Leave a Comment