அந்தப் படத்தில் நான் ஹீரோ.. யாருக்கும் தெரியாது.? செந்தில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Senthil : 80,90 ஹீரோ இல்லாமல் கூட படம் எடுத்து விட முடியும் ஆனால் கவுண்டமணி, செந்தில் இல்லாமல் படமே எடுக்க முடியாது அந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கவுண்டமணியிடம் செந்தில் அடிவாங்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் இளசுகள் முதல் முதியவர் வரை சிரிக்க வைக்கும்..

அதனாலயே இவர்கள் கூட்டணி தொடர்ந்து கொண்டே இருந்தது திடீரென கவுண்டமணி ஹீரோவாக நடிக்கப் போய்விட்டார் அதன் பிறகு செந்தில் சில படங்களில் தனியாக நடித்திருந்தாலும் கவுண்டமணி இல்லாதது செந்திலுக்கு மார்க்கெட் குறைக்க தொடங்கியது.

திராட்சை ரசம் ஊற்றி மனத் தீயை அணைக்கிறேன்.. நித்தம் நித்தம் குடியால் அழியும் நடிகைகள்.. நடுரோட்டில் தள்ளாடி போலீசில் சிக்கிய நடிகை..

ஒரு கட்டத்தில் செந்திலும் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்க ஆரம்பித்தார். கவுண்டமணி போல வடிவேலு, விவேக், சந்தானம், நாகேஷ் என பலரும் காமெடியன்னாக இருந்திருந்தாலும் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டனர் ஆனால் செந்தில் மட்டும் ஹீரோவாக நடித்தது இல்லை என பலரும் கூறுகின்றனர்.

இது குறித்து செந்திலிடமே ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட பொழுது இல்லை என கூறினார் ஆனால் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன் ஆனால் அது யாருக்கும் இதுவரை தெரியாது என ஷாக் கொடுத்தார். அந்த படம் வேறு எதுவும் அல்ல “ஊரை தெரிஞ்சுகிட்டேன்” படம் தான்..

20 கோடி தரேன் உனக்கு ஓகேவா.. நடிகையிடம் கெஞ்சிய பிரபலம்.. முடியவே முடியாது என மறுத்த முன்னணி நடிகை.

பாண்டியராஜன் நடித்த அந்த படத்தில் முழுக்க முழுக்க பாண்டியராஜன் உடன் நான் வருவேன். அப்பொழுது ஹீரோ உடன பயணம் செய்யும் கதாபாத்திரம் என்றும், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றும் செந்தில் இடம் கூறியுள்ளார்கள் அதனால் தான் அந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்திருந்தேன் என அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version