விஜயகாந்த்திடம் இருக்கும் பண்பும், பாசமும் வேறு யாருக்குமே கிடையாது.? விடியற்காலை 4 மணிக்கு டீ வாங்கிட்டு வந்து கொடுத்தார் – புகழ்ந்து பேசிய இயக்குனர்.!

தமிழ் சினிமா உலகில் நல்ல நடிகர்கள் இருந்தாலும் நல்ல மனிதராகவும் உதவி செய்யும் மனப்பான்மையும் நிறைய பேருக்கு இருக்கா என்றால் அது கேள்விக்குறிதான் ஆனால் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக ஓடிய விஜய்காந்த் திரையில்  நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் பலருக்கு உதவி செய்வது பாராட்டுவது போன்ற நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் அரவிந்த் ராஜா அண்மையில் நேர்காணல் ஒன்றில் விஜயகாந்த் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அரவிந்த் ராஜா விஜயகாந்தை வைத்து கருப்பு நிலா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு நிலா திரைப்படம் தயாராகி கொண்டு இருந்தது.

இந்த திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் எடிட்டிங் செய்யும் போது விஜயகாந்த் உடன் இருந்துள்ளார் இரவு நேரம் அதிகமாக இயக்குனர் விஜயகாந்த் இடம் நீங்கள் போய் ரெஸ்ட் எடுங்க.. வீடியோ காலை நாலு மணிக்கு நீங்க ஷூட்டிங் வரும்போது நாங்கள் அந்த காட்சியை உங்களுக்கு காட்டுகிறோம் என கூறி அவரை போக சொல்லிவிட்டார் இயக்குனர். பட குழுவினர் சொன்னது போல விஜயகாந்த் விடியற்காலை 4 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட் இருக்கு வந்துள்ளார்.

ஆனால் அனைவரும் இரவு முழுக வேலை பார்த்ததால் நன்கு தூங்கிக் கொண்டிருந்தனர் உடனே கேப்டன் விஜயகாந்த் அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ வாங்கி வந்துள்ளார். ஒவ்வொருவரையும் எழுப்பி டீயை கொடுத்து குடியுங்கள் என சொல்லி உள்ளார் அப்படியே அனைவருக்கும் கொடுக்கும் பொழுது இயக்குனருக்கும் கொடுத்துள்ளார் அப்பொழுது அவர் எழுந்திருத்து.

சார் நீங்கள் ஏன் இதை எல்லாம் செய்கிறீர்கள் என கூறியுள்ளார் அதற்கு விஜயகாந்த்  டீ வாங்கும் அந்த பையன்னும் இரவு முழுக்க உங்களுக்கு வேலை செய்து இருப்பான் அவனும் அசதியாக தூங்கிக் கொண்டிருக்கிறான் அதனால் தான் எழுப்பவில்லை என விஜயகாந்த் சொன்னாரு இதை அப்பொழுது கேட்டு அரவிந்த் ராஜா பூரித்து போனாராம் இப்படி ஒரு நடிகரை நான் இதுவரை பார்த்ததே இல்லை என அந்த நேர்காணலில்  கூறினார்.

Leave a Comment