அஜித்துக்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும்.. பத்தவே பத்தாது.. நேர்காணலில் நெகிழ்ச்சியாக சொன்ன இயக்குனர் ஹரி – AK வுக்கு செம்ம தில்லு..

இயக்குனர் ஹரி சூர்யா விக்ரம் போன்ற முரட்டு நடிகர்களை வைத்து சூப்பரான ஆக்சன் படங்களை கொடுத்து வெற்றி கண்டு வருகிறார் இருப்பினும் சிங்கம் 2 திரைப்படத்திற்கு பிறகு இவர் இயக்கிய சாமி ஸ்கொயர் திரைப்படம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து படம் பண்ண கதை எல்லாம் ரெடி பண்ணினார் ஆனால் அந்த படம் ட்ராப்பானது. அதைப் பற்றி யோசிக்காமல் உடனே இயக்குனர் ஹரி தனது மச்சான் வளர்ந்து வரும் நடிகரான அருண் விஜயை வைத்து யானை என்ற திரைப்படத்தை இயக்கி அசத்தியுள்ளார்

இந்த படம் ஜூலை 1 வெளியாக இருக்கிறது இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் ஹரி நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் கூறியது.

அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய ஒரு கம் பேக் திரைப்படம் ஆக இருந்தது அந்த திரைப்படத்தை நான் பார்த்துவிட்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு போன் செய்து நன்றி தெரிவித்தேன் மேலும் அஜித்திற்கு மனதார நன்றி தெரிவித்தேன் ஏனென்றால் ஒரு மிகப்பெரிய ஹீரோ அவருக்கு நிகரான ஒரு வில்லன் கதாபாத்திரம் படத்தில் கொடுப்பது மிகவும் அரிது அதனை அஜித் செய்துள்ளார்

அதற்கு காரணம் அஜித் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையே அதன் காரணமாகத்தான் தைரியமாக இன்னொரு நடிகருக்கு அந்த வாய்ப்பை வழங்கி உள்ளார். யாருக்கும் வராத அந்த மனசு அவருக்கு வந்துள்ளது அதனால்தான் அஜித்திற்கு மனதார நன்றி கூறினேன் என ஹரி சொன்னார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment