எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இதை மட்டும் நான் செய்யவே மாட்டேன் – ஒத்த காலில் நிற்கும் நடிகர் கார்த்தி.!

சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் தனது முழு திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

இவர் இதுவரை ஆயிரத்தில் ஒருவன், கைதி, நான் மகான் அல்ல, கொம்பன் தீரன் அதிகாரம்ஒன்று போன்ற படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து இப்பொழுது கூட இவரது கையில் பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் ஆகிய படங்கள் இருக்கின்றன இதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது விருமன் திரைப்படம் தான்.

இந்த திரைப்படம் கிராமத்து சப்ஜெக்டை மையமாக வைத்து உருவாகி உள்ளதால் கொம்பன் திரைப்படம் போல இந்தப் படம் இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிசங்கர் ஹீரோயின்னாக நடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி தொடர்ந்து சிறப்பு அம்சம் உள்ள கதைகளில் நடித்து வந்தாலும் அதில் சில புகைப்பிடிக்கும் விஷயங்கள் இருந்தால் அதை தவிர்க்க சொல்லுவது வழக்கம் அதை அப்படி கட்டாயப்படுத்தினால் அந்த பட வாய்ப்பையே விட்டு விடுகிறாராம் நடிகர் கார்த்தி சொல்லப்போனால் கோடிக்கணக்கில் காசை கொட்டிக் கொடுத்தாலும் புகை பிடிக்கும் படியான படங்களில் நடிக்க மாட்டேன் என கூறி வருகிறார்.

தொடர்ந்து இதை பின்பற்றி வருவதால் நடிகர் கார்த்திக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இவரைப்போன்று நடிகர் அஜித் விஜய் போன்றவர்களும் இதை பின்பற்ற தொடங்கி உள்ளனர். இளம் நடிகர்களும் இது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது அவரது ரசிகர்களை பாதுகாப்பதற்கு சமம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment