இதுவரை வாய்ப்பே கிடைக்கவில்லை என் நிலைமை இதுதான்.! அண்ணாமலை சீரியல் நடிகையின் தற்போதைய நிலை.!

நடிகை மஞ்சரி முதன்முதலில் உறவுகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர், அதுமட்டுமல்லாமல் ச்சீ இவள் எல்லாம் ஒரு பெண்ணா, எதற்காக இருக்கிறாய் நீ என குடும்ப பெண்களின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்டவரும் இவர்தான் நடிகை மஞ்சாரி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.?

நடிகை மஞ்சரி முதன்முதலில் உறவுகள் என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் அதனைத் தொடர்ந்து கோலங்கள் அண்ணாமலை என பல சீரியல்களில் நடித்தவர், இவர் தமிழ் சீரியல் மட்டுமல்லாமல் பலமொழி சீரியல்களிலும் நடித்துள்ளார், இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது திருமணத்திற்கு பிறகு இவர் சீரியலை விட்டு விலகினார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை மஞ்சாரி கூறியதாவது. என்னுடைய சொந்த ஊர் சிங்கப்பூர் நான் முதன்முதலில் உறவுகள் என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானேன் இந்த சீரியலை தொடர்ந்து எனக்கு பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவரை நான் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து உள்ளேன்.

manjari
manjari

எனக்கு எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பேன், ஆனால் பலரும் எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் தான் நல்லா இருக்கு என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கொடுத்தார்கள், அதுமட்டுமல்லாமல் நெகடிவ் கதாபாத்திரம்தான் மக்களிடம் பிரபலமாக பேசப்படுகிறார்கள், அதேபோல் அழுத காட்சி என்றால் எனக்கு பிடிக்காது ஏன் என்றால் கொஞ்சம் தைரியமான பெண், அதனால் மக்கள் திட்டும் கதாபாத்திரமே எங்களுக்கு பலம். அதாவது நெகட்டிவ் கதாபாத்திரம் தான் எங்களுக்கு பலம்.

நான் கோலங்கள் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போது கர்ப்பமாக இருந்தேன், பின் சீரியலில் இருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது எங்களுக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்தது, அதன் பிறகு நான் சிங்கப்பூரிலேயே செட்டில் ஆகிவிட்டேன், ஆனால் என்னுடைய சினிமா கேரியரை விடவில்லை இன்னும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

manjari
manjari

மேலும் எனக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக ஆர்வமாக இருக்கிறது ஆனால் இதுவரை எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, முன்னாடி கொஞ்சம் குண்டாக இருந்தேன் ஆனால் தற்பொழுது ஹேர்கலரிங் பண்ணி கொண்டு ஒளியாக மாறி விட்டேன், தற்போது நிறைய வித்தியாசங்கள் என்னிடம் இருக்கிறது, எங்களுக்கு அழகான பெண் குழந்தை இருக்கிறது பிற்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறாறோ அதை  நிறைவேற்றுவது என் கடமை.

மேலும் எனக்கு மீண்டும் தமிழ் சீரியலில் நடிக்க ஆசையாக இருக்கிறது வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

manjari
manjari
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment