NO. 1, NO. 2.. நடிகைகளுடன் சேர மறுத்த சிவகார்த்திகேயன்.! அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வில்லன் நடிகர்.!

சினிமா உலகில் திறமை இருப்பவர்கள் எதில் வேண்டுமானாலும் சாதிக்க முடியும் அந்த வகையில்  இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட விக்னேஷ் சிவன் காலப்போக்கில் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் மென்மேலும் பிரபலம் அடைந்துள்ளார்.

இவர் இதுவரை இயக்குனராக பணியாற்றிய பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் நானும் ரவுடிதான் தானாசேர்ந்தகூட்டம் ஆகிய படங்கள் அடங்கும். அண்மையில் கூட விஜய்சேதுபதியை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா, சமந்தா, யோகி பாபு போன்ற டாப் நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்தனர். காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது.

காத்துவாக்குல ரெண்டு காதல்  படத்தின் பட்ஜெட்டை விட நல்ல வசூல் வேட்டை நடத்தியது இதனையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியும் தீர்த்தது. இப்படி இருக்கின்ற நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த ஹீரோ விஜய் சேதுபதி கிடையாது வேறு ஒரு நடிகர்தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விக்னேஷ் சிவன் இந்த படத்தின் கதையை முதலில் சிவகார்த்திகேயனை மனதில் வைத்துதான் எழுதினாராம் ஆனால் சில காரணங்களால் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தவற விட்டுள்ளார் என கூறப்படுகிறது அதன் பின் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Leave a Comment

Exit mobile version