எனக்கு வயசு ஆகல அப்படி கூப்பிடாதீங்க புலம்பித் தள்ளும் நித்யா மேனன்.!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அனைவராலும் அடையாளம் காணும் அளவிற்கு ஒவ்வொரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நடிகை நித்யா மேனன். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான்  திருச்சிற்றம்பலம்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசி கண்ணா, ஆகியோர் நடித்துள்ளனர். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் அவர்களிக்கு அப்பாவாக பிரகாஷ்ராஜும் தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் நித்யா மேனன் நடித்த ஷோபனா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிகாட்டி இருப்பார் நடிகை நித்யா மேனன். மேலும் இந்த திரைப்படத்தில் தாய்க்கிழவி என்ற பாடலும் இடம்பெற்று இருக்கும். இந்த பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அந்த பாடலில் தனுஷ் நித்தியா மேனனை பார்த்து செல்லமாக பாடுவது போல  காட்டியுள்ளனர்.

நித்யா மேனன் இந்த படத்தின் மூலம் இழந்த மார்க்கெட்டை மீண்டும் தக்கவைத்து கொண்டார். நீண்ட கால இடைவேளைக்கு பிறகு தனுஷ் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த பாடலைப் பார்த்த சிலர் சமூக வலைதள பக்கங்களில் நித்யா மேனனை தாய்க்கிழவி என்று கூறி வருகின்றனர். இதனால் கடுப்பான நித்தியா மேனன் ஒரு வீடியோ மூலம் தயவு செய்து என்னை தாய்க்கிழவி என்று யாரும் கூப்பிடாதீர்கள் கெஞ்சி கேட்கிறேன் கேட்டுள்ளார். அவர் பேசிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில்  மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment

Exit mobile version