புதிதாக தொடங்கப்பட்டது “பிக்பாஸ் அல்டிமேட்” : பங்குபெற்றுள்ள போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.? லிஸ்ட் இதோ.

வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை மென்மேலும் உயர்ந்து கொண்டே வருகின்றன அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்ட பொருட்செலவில் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் பலரின் ஃபேவரட் நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து  சீசன் சீசனாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் தற்போது ஒளிபரப்பாகி வந்த ஐந்தாவது சீசன் நேற்றுடன் முடிவு பெற்றது. மேலும் இந்த ஐந்தாவது சீசனில் ராஜு முதலிடத்தை பெற்று 50 லட்சம் ரூபாய் பரிசு வாங்கியுள்ளார். இவரை தொடர்ந்து ரன்னர் அப் பிரியங்கா ஆவார்.

நேற்று கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் கமலஹாசன் ஒரு அறிவிப்பு கூறியுள்ளார் ஆம் இதுவரை மக்களின் பேராதரவைப் பெற்று ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி புதிய பொலிவுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி என ஹாட்ஸ்டார்யில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியையும் கமலஹாசனே தொகுத்து வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இதுவரை நடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆட்டத்தை வேற லெவலில் ஆடிய போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள பழைய பிக்பாஸ் பிரபலங்கள் யார் யார் என தகவல்கள் வெளியாகின. அவர்கள் வனிதா, பரணி, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஷெரின் போன்றவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Leave a Comment

Exit mobile version