குக் வித் கோமாளி புகழால் தலையில் துண்டு போட்ட கடை முதலாளி.!

கடந்த ஒரு வருடமாகவே மக்களை படாத பாடு படுத்தும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா தொற்று தான் இந்த தொற்று மக்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையில் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர்கள்,நடிகைகளுக்கும் பரவி அவர்களும் இந்த நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த இந்த வைரஸ் திடீரென்று தேர்தலுக்கு பின்பு மிக வேகமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதனையடுத்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று விளங்கியவர் தான் புகழ்.

இவர் கொரோனா தோற்று அபாயம் இல்லாமல் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார் மேலும் அங்கு இவரது ரசிகர்கள் இவரை பார்த்த உடனே இவரை சுற்றி சூழ்ந்து விட்டார்கள் இதனால் அங்கு அதிகம் கூட்டம் ஏற்பட்டு விட்டதாம்.

pukazh
pukazh

அந்த ரசிகர்கள் பலரும் முக கவசம் அணியாமல் இருந்ததால் அதிக கூட்டத்தில் புகழ் மாட்டிக்கொண்டார் இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை விரட்டுவதற்காக லேசான தடியடியில் ஈடுபட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் எந்த அபாயமும் இல்லாமல் அங்கு கூட்டம் கூடியதால் புகழ் திறக்க வந்த அந்த கடைக்கும் காவல்துறையினர் சீல் வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல் இவர் எதற்கு அந்த கடைக்கு சென்றார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment