புதுப்புது அர்த்தங்கள் சீரியல் நடிகைக்கு கிடைத்த மிகப்பெரிய பட்டம்.!

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் புதிய சீரியல்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அதோடு இவர்கள் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்து இருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது  இதன் மூலம் நடிகைகள் பிரபலமடைந்து தங்களுக்கு என ஒரு இமேஜை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயில் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 16ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சி சின்னத்திரை நடிகைகளின் அழகிப் போட்டி என்று கருதும் அளவிற்கு ஒளிபரப்பாகி வந்தது. இவ்வாறு நிகழ்ச்சியின் நடுவராக ராதா மற்றும் நடிகர் நகுல் செயல்பட்டனர்.

அறிமுகமான காலகட்டத்தில் இருந்து மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.  இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகை பார்வதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து தேஜஸ்வினி சில புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை தவற விட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

பிறகு மூன்றாவது இடத்தினை ஆயிஷா பிடித்தார்.  பார்வதி தனக்குக் கிடைத்த பட்டத்தை தனது பெற்றோருடன் பெற்றார்.  தனக்கு அணியப்பட்ட கிரீடத்தை தனது தாயாருக்கு அறிந்து மகிழ்ந்தார்.  இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டது.

pavithra
pavithra

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புது புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானியின் மருமகளாகவும், ஹீரோயினாகவும் நடித்து அசத்தி வருகிறார் மேலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரசிகர்கள் இவருக்கு தனது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Comment