ரோஜா சீரியலில் பரபரப்பை கிளப்ப போகும் சிப்பு.! இனிதான் இருக்கு ஆட்டமே.!

மக்கள்கள் தற்போது சினிமா திரைப்படங்களை பார்ப்பதை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் கூறவேண்டுமென்றால் சின்னத்திரை சீரியல்களில் குடும்பங்களில் நடக்கும் சந்தோஷம் மற்றும் சண்டை எப்படி வருகிறது என்பதை தத்ரூபமாக காட்டி வருகிறார்கள்.

மேலும் சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா என்ற சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் TRPயில் முதலிடத்தை பிடித்து வருகிறது அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வரும் ஷபானா மற்றும் சிப்பு சூர்யன் ஆகிய 2 பேரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்கள்.

இவர்கள் செய்யும் ரொமான்ஸ் சீன் மக்களை அதிகம் இந்த சீரியலை விரும்பி பார்க்க வைக்கிறது.சமீப நாட்களாக இந்த சீரியலில் கதை ஆசிரியர் ரோஜா சீரியல் கதையை பார்த்து பார்த்து எழுதி வருகிறாராம்.

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் சிப்பு சூர்யன் தற்போது ஒரு தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் என்னை திரையில் பார்க்க மிஸ் செய்திருப்பீர்கள்.அதனால் அடுத்த வாரத்தில் இருந்து புதிய திருப்பத்துடன் நீதிமன்ற காட்சியுடன் ரோஜா சீரியலில் நான் வருவேன்.

sibbu
sibbu

என சந்தோஷமான தகவலை இன்ஸ்டாவில் பதிவிட்டதால் ரசிகர்கள் பலரும்  உற்சாகத்தில் குதித்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் நீங்கள் இந்த சீரியலில் நீண்ட காலம் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கூற எப்போது நீங்கள் திரைப்படங்களில் நடிக்க செல்வீர்கள் என பல ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment